புதன், 24 ஜூலை, 2019

144. (720 ) தூரிகை






 தூரிகை

(1. சாரிகை - கவசம் .2. பேரிகை - முரசு .3. பூரிகை - ஊதுகுழல். 4. சேரிகை - ஊர். 5. தூரிகை - எழுதுகோல்.)

தூரிகையால் வண்ணச் சாயமிடும் ஓவியன்
காரிகையை,   கவின் இயற்கையை கருவாக்குவான்.
தூரிகை எழுத்தாளன் படைக்கலம். சமுதாயச்
சாரிகையாகவும் சமயத்தில் சுழலும் கோல்.

பூரிகையாகவும் நீதிப் பேரிகை கொட்டும்.
தூரிகைத் தடமெழுத்தால்,    வண்ணத்தால் ஆழருத்தமுடையது.
சேரிகைக்கு வெகு ஆதாயமாகும் கருவி.
நாரிகையென் தூரிகை தமிழுக்காய் தமிழெழுதும்
.
14-2-2017








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...