வியாழன், 4 ஜூலை, 2019

127. (704) அப்பா தூக்குங்கோ!








அப்பா தூக்குங்கோ!  

வேலைக்குப் போகாதேங்கோ
என்னோடு விளையாடுங்கோ
வாடா சரிடா கண்ணே
தூக்கிய அப்பா நிறைய
துரித முத்தங்கள் ச்சூ....ச்சூ...
அம்மாவிடம் குழந்தை கைமாற
அப்பா வேலைக்குப் போகிறார்.
அழும் குழந்தை அம்மா 
அணைப்பில் ஆறதலடையும்.
மறுபடியும் இதே பாடம்.
இதை சந்திக்காத எந்த 
அப்பா உலகிலுள்ளார்.
உறவும் பிரிவும் ஆடலும்
அழுகையும் சுழரும் சக்கரம்.
அதைத் தாங்கி வாழ்தலே வாழ்வு

14-6-2016





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...