என் சுமை
உன் மலர் வதனம் பார்க்கையில்
என் சுமை எனக்குப் பெரிதல்ல.
அன்பே நாம் சேர்ந்தே வாழ்வோம்.
காத்திரு எனக்காக கண்ணனே
கடினமாயினும் வேலையை விரைவில் முடிப்பேன்.
காதல் பலம் மிக்க உணர்வன்றோ!
தாஜ்மகால் கல்லறை தானே நாம்
தாமரைக் குளத்தருகே மனை அமைப்போம்.
தாம்பத்தியம் அமைப்போம் தாலாட்டும் பாடுவோம்.
12-3-2018


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக