புதன், 10 ஜூலை, 2019

135 (711) அரசாட்சி










அரசாட்சி

சங்கிலே கோட்டை புனைந்து
செங்கொல் கரத்தில் ஏந்திய
செங்கனல் வார்த்தைகள் அரசாட்சி
சங்கதிகள் பல்லவி, அனுபல்லவியாய்
பொங்கி விரிகிறதுவரணங்கள்
பங்கில் திரள்கிறது பகைப்படைகள்.

அன்பு அரசாளுமென்ற மென்விரிப்பு
வன்முறைக் கொடியால் அலைக்கழிப்பு
பொதியான சுயநலமூட்டை
விதியாய் உதைக்கிறது நல் மனிதத்தை
நதிவேக மாற்றம் இது.
விதிவலக்கற்ற புலிக்கூண்டு நிலையே

 (வரணம் - சூழ்தல்,  மதில்)

13-12.2008.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...