புதன், 10 ஜூலை, 2019

135 (711) அரசாட்சி










அரசாட்சி

சங்கிலே கோட்டை புனைந்து
செங்கொல் கரத்தில் ஏந்திய
செங்கனல் வார்த்தைகள் அரசாட்சி
சங்கதிகள் பல்லவி, அனுபல்லவியாய்
பொங்கி விரிகிறதுவரணங்கள்
பங்கில் திரள்கிறது பகைப்படைகள்.

அன்பு அரசாளுமென்ற மென்விரிப்பு
வன்முறைக் கொடியால் அலைக்கழிப்பு
பொதியான சுயநலமூட்டை
விதியாய் உதைக்கிறது நல் மனிதத்தை
நதிவேக மாற்றம் இது.
விதிவலக்கற்ற புலிக்கூண்டு நிலையே

 (வரணம் - சூழ்தல்,  மதில்)

13-12.2008.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...