மதமல்ல இது மனிதம்.
மதம் வேறானாலும் இதமுடைய மனிதம்.
கதமின்றிக் கந்தவேளும் இஸ்லாம் அக்பரும்
ததம் (அகலம்) அன்பென்று முத்திடும் நிலைமை.
நிதமனைவரும் நிசமாயிப்படி வாழ்தல் சொர்க்கம்.
கொலை, களவு, பொய் மதுவின்றி
வலையெனும் நீதிநெறி தருமம் உண்மையுள்
குலையாது மதமென்ன மார்க்கமென்னவென
நிலையூன்றுவது வேறுபாடற்ற ஒரு பாதையே!
சலாம். இசுலாம், சாந்தி, அமைதி.
படைத்த வல்லமை இறைக்குக் கட்டுப்படுதல்.
இந்துவானவர் கடவுளையிதயத்தால் நெருங்குவோர்
இறையையறிவார், நம்மாற் காணவியலாதவரெவரும்
கண்டதுமில்லையென்கிறது உபநிடதம்.
3-5-2017