இது சௌந்தரியின் குரலில் அவுஸ்திரேவிய வானொலி இணைப்பு.
https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10158704815263984/
இது பழைய ஒரு கவிதை அதன் இணைப்பு இது.
https://kovaikkavi.wordpress.com/2017/03/07/481-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88/
சத்திய சோதனை
0
சத்தியமே கடவுள் வழி காட்டுமொளி.
சத்தியத்தை நாடும் ஒருவனே வாழ்வில்
சரியான விதியைப் பின்பற்றுவானென்கிறார் காந்தி.
சத்தியத்திற்கு என்றுமே சோதனை தான்
சத்தியம் பாதுகாக்கும் கவசம் அல்லது
உத்தம மார்புக் கவசம் எனலாம்.
0
சத்திய சோதனை எங்கும் எவருக்கும்
நித்தியம் ஏற்படும் பிரச்சனைப் பின்னல்.
மன்னிப்பிலும் விட்டுக் கொடுத்தலிலும் வேதனைகள்
யன்னலூடாகத் தானாக விலகுதல் உறுதி.
வன்மமான சுயநலம் தான் உலக
இன்னலிற்குக் காரணம் என்றும் கணிக்கலாம்.
0
உன்னத நோக்கங்களில் தூய்மை அவசியம்.
தன்னலமே கண்களை முற்றாகக் குருடாக்குகிறது.
அன்பின் தேவையும் தெய்வ பக்தியும்
ஆன்மபலம் தந்து வேதனை விலக்கும்.
தியானம் பிரார்த்தனையால் மனக் கட்டுபாடு
வசமாக சத்திய சோதனை வெல்லும்.
0
7-3-2017