இயலாத கனவு
00
தேவதையால் மீட்சி வரும் நம்பிக்கையில்
பூவிதையும் சொரியாத ஏமாற்றம்
சீவிதம் ஏமாற்றத்தால் விலை போவதா!
சேவிதம் கூடக் கை கொடுக்காதா!
அவள் உதவுவாள் நம்பிக்கை!
எவற்றையும் பொருட் படுத்தாது
கவனிப்பற்ற ஏழைக் கனவாகக்
கவளம் கூடக் கிடைக்கலை
00
கவறலால் இதயம் பலவீனமானது.
திவலை இரக்கமும் அற்ற
புவன வாழ்வால் என்
சுவரற்ற சுவர்ணபூமி ஆனது.
கிராமம் படிப்பகம் சுமப்பதான
இராசாங்கக் கற்பனை ஒரு
மிராசுகுடிப் பெரும் நினைப்பு
மனிதநேயம் ஒதுங்கும் நிலை
00
புனித தவம் மனிதநேயம்.
வனித ஓவியங்களைப் பொறாமை
மைனிகன் ( கறையான்) அரித்து அழிக்கிறது.
மேனிலை வெற்றுக் களவாகிறது.
மனிதன் ஏன் மாறுகிறான்!
இனிய உறவை மறக்கிறான்
நனி வாழ்வு இழந்து
தனியே தானே அழிகிறான்!
00
வேதா. இலங்காதிலகம்- தென்மார்க்- 6-2023