இருத்தல் காட்டும் பனுவல்
குளிரின் போர்வையில் நடனம்.
தெளித்த மழையில் துளிரிலைகள்
எளிமையாய்க் காற்றை முத்தமிடுகிறது.
இளிதலற்ற இயற்கை மிளிர்விது
00
பூமியோடு ஒட்டும் பனி
சாமியோடு முட்டும் பூவாகி
சேமிக்கும் திமிராகி மௌனிக்கிறது
பூசிக்கும் கவிதையாய் நிறைகிறது
00
கம்பர் கவிதைத் தாகத்தால்
எம்பிய அறிவு மோகம்
கம்பீரமாய் எழுந்து பொங்கி
கம்பக்கூத்தாகி மொழி பறையாகிறது.
00
இல்லாமற் போகும் வாழ்வில்
இருத்தல் காட்டும் பாக்கள்
செருக்குடை எண்ண மகரந்தப்பொடி
விருப்புடன் திண்மையாய்ப் படிகிறது.
00
வேதா. இலங்காதிலகம் தென்மார்க் 17-12-2023