அன்பெனும் சுடர்.
(திகம்பரன்-கதியற்றவன்-சிவன்)
00
முன்னம் செய்த தவமென்பேன்
மூத்தோர் தந்த வரமென்பேன்
கன்னி நீயென் கை சேர்ந்தால்
கணமே உயர்ந்த பிறப்பென்பேன்
00
மின்னல் அன்ன பூஞ்சிரிப்பில்
மீளாதென்னைச் சிறையிலடை
கன்னற் செம்மை நிறங்காட்டி
பின்னும் உலகைச் சிறப்பாக்கு.
00
இணைந்தாடி ஒன்றாகும் இதயம்
இடைவெளி களைந்து இசையுமிழும்
பிறப்புடன் திறமை பிறக்கிறது
மெருகூட்ட சாம்பிராணியாய் மணக்கிறது.
00
கோபதாப மனச்சுழலைப் புறமுதுகிட
தீபமாவது அன்புச் சுடர்
திறமைகள் திகம்பரன் இரகசியமல்ல
அறிவில் உயர்தலே வாசித்தல்
00
கவித்தாமரை - வேதா. இலங்காதிலகம்.தென்மார்க் -28-10-2023