சனி, 30 ஏப்ரல், 2022

382. (915) கலைத் தமிழின் வித்தகம்

 





கலைத் தமிழின் வித்தகம்


பரந்த உலகில் எம்

விரிந்த அறிவு முகிழ்ச்சியால்

சொரிந்த பவளமல்லிகையாய்

பிரிந்து வகை வகையாய்

புரிதலுக்கு விருந்தாயெம்  நூல்கள்

00

அறிவுத் தேநீரில் கரையும்

அமுதத் தேனாக வரிகள்

அலைகடல் அணைக்கும் மணலாக

விலையற்ற ஓவியச் சொரூபமாக

கலைத் தமிழின் வித்தகம்

00

உயிர் நனைக்கும் பரிவு

உறவாய்   உலவும் மந்திரமாய்

உன்னத வரிகள் இதயத்தில் 

உலராத நடனமாய்  அறிவு

உயிர் நினைக்கும் விருந்து.


 30;-4-2022


திங்கள், 25 ஏப்ரல், 2022

381. (914) யாரும் யாருடனும் இல்லை!

 







இலண்டன் தமிழ் வானொலியில் (       ) சகோதரன் பா. சுதாகரனின்
சுனிக்கிழமை நிகழ்விற்கு – அவர் கேட்ட தலைப்பில்..... 9-4-2006ல் எழுதிய வரிகள்.
00
யாரும் யாருடனும் இல்லை!



நா கழன்ற மலரான நிலையில்
சோர்வுடன் நாம் கூறும் சொல்லிது
யாரும் யாருடனும் இல்லையென்று.
யார் சொல்வது! ஏன்ன தாக்கம்!
சரளைக் கல்லல்ல உன்  இதயம்!
தரளம்!  சற்குண சமுத்திரம் உன்னிதயம்!
திரளும் வெறுமை யெனும் நஞ்சை
தினமும் பாற்கடலாய்க் கடைந்து வீசு!
00
தாழ்வு மனச்சிக்கல் விரட்டு!  உன்
ஆழ் மனத்துச் சோர்வை அகற்று!
கீழ்நிலை என்பது நாம் உருவாக்குவது!
சூழ்நிலை மாற்று நம்பிக்கைச் சுடரேற்று!
இணைந்திரு எம் இனிய சொந்தமென்று!
இனிய நிளைவை நீ பிடித்திழு!
இற்றுவிடாத திறமைகள் உன்னுள்
இறைந்து கிடப்பதை ஏன் மறந்தாய்!
00
இலையுதிர்க்கும் மரங்களின் திடநிலை பார்!
கலையிழ்த மனமாக்கும் கருமை வெறுமையை
கலைத்திடு! நிலைகுலைய நீ  என்ன 
அலைக்காற்றா! அசையாத மனிதன் அல்வலா!
நீ சாமானியனல்ல! பெரும் சாமர்த்தியன்!
நீ சமூகத்துடனிரு  அவர்கள் விலக்கினாலென்ன!
நீ அன்போடிரு! ஆவர்கள் வெறுக்கட்டுமே!
நீ ஆசையுடன் வாழ்வை நேசி! துன்புமுனக்குத்தூசி!


- 9-4-2006 






சனி, 16 ஏப்ரல், 2022

380 - (913) கரணமிடும் வாழ்வுப் போர்.

 






கரணமிடும் வாழ்வுப் போர்.


(சொற் பொருள் விளக்கம்  --- அரணிக்கும் - அலங்கரிக்கும.;   திரணம் - அற்பம்   பாயிரம் - வரலாறு)

00

அறியாதவர்கள் கருத்தீயும் போது

குறியாக மனதில் குதூகலம்.

செறிவாக நாளுமிது குவியாததற்கு

நெறியான இலக்கியச் செழிப்புதவும்.

00

மரணம் நோக்கிய பயணத்தில்

கரணமிடும் வாழ்வுப் போர்.

அரணிக்கும்  துறைகள் சாதனைகளால்.

திரணமின்றிச் சுடர் வீசலாம்.

00

வானப் பிம்பம் கடல் நீலம்

கானமிசைத்துக் கூறும் அலைகள்

ஊனம் களையும் இன்பம்.

தானமாயிதுவும் கண்களிற்கு விருந்து.

00

உடல் உள வலுவால்

கடக்கும் வீர வசனங்கள்.

படபடககும் இதயத்தால்

தடதடக்கும் நடை கூட.

00

சொல்லால் (எழுத்தால்) ஒருவர் முகமறியலாம்.


சொல்லால் கட்டுமானமிடும்  கவிதை

துல்லியமான நதிசூழ் நிலமாய்

அல்லலற்றது இலக்கிய மேன்மை

00

ஆயிரம் கற்கள் எறிந்தாலும்

பாயிரமான பறத்தல் வாழ்வு

வாயில் வழி ஓடிடுமா!

00

மீனவன் முயற்சியின் தூண்டிலால்

மீன்கள் நீச்சலை மறந்திடுமா!

மீண்டும் மீண்டும் நீந்துமே!


  21-3-2022

புதன், 13 ஏப்ரல், 2022

379. (912) சுபகிருது தமிழ் புத்தாண்டு

 





2022 – 14 சித்திரை ... எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!


சுபகிருது தமிழ் புத்தாண்டு


புதிய காற்று சுத்தம் தரும்

புதிய ஆடை மனிதருக்குப் பிடிக்கும்

புதிய அனுபவமும் புதுப்பாடம்

புதினம் புதுமை  புத்துணர்ச்சியே!

புதிதென இரண்டாயிரத்து இருபத்திரண்டு.

வுpதியான நற்பாதையோடு பிறக்கட்டும்.

00

நிர்மலமாய் பிறக்கட்டும் பல

அருத்தமுடை வெற்றிகள் குவிக்கட்டும்

அவலங்களின்றி  அமைதி பிறக்கட்டும்

அகம்பாவ   அகவிருள்  உலகழிந்து

அத்தனை முறையும் சிறப்புற

முத்தான புதுமைகளோடு வருவாய்.

00

சுபகிருது தமிழ் புத்தாண்டு

சுபமுடன் மலரட்டும்  இனிதாக.

சுபசோபனமாய் எண்ணப் பிரவாகம்

வண்ணப் பழந்தமிழ்ச் சொற்தொடராய்

திண்ணமாய்க் குவித்தல் என்னாசை

மண்ணிலே தமிழ் நிலைக்கட்டும்


கவிமணி  வேதா  இலங்காதிலகம் - டென்மார்க் - 13-4-2022


428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...