புதன், 30 டிசம்பர், 2020

321. (884) வலிமையாய் விரியட்டும் 2021

 




வலிமையாய் விரியட்டும் 2021

வலிமையாய் விரியட்டும் 2021
மெலியார் வலியவராகட்டும்
மெலிகோல (கொடுங்கோல்) அழியட்டும் 
பொலியட்டும் சிறப்புகள்.
பலிப்பு (வெற்றி) குவியட்டும் நோய்
நலிவுகள் ஒழியட்டும்

வலிவுடை நிகழ்வுகள்
பொலிவுடை தமிழ்
மலிவற்ந உயர்ச்சியாய்
சலிக்காது சேர்ந்தது
சிலிர்க்கும் நிறைவிது
ஜொலிக்கட்டும் புத்தாண்டிலும்

அலட்சியங்கள் தாண்டி  
அவமானங்கள் நீராக்கித் 
தவமெனும் வாழ்வு 
அவமின்றிச் சித்திக்கட்டும் 
புவனம் சிறக்கப்  
புத்தாண்டு மலரட்டும்


2020-31 மார்கழி






செவ்வாய், 29 டிசம்பர், 2020

320. (883) கிளி சாத்திரம்

 





கிளி சாத்திரம்


அன்பாலே பேசி அணைக்கலாம் உன்னை

வன்முறைக் கிளியோசியக் கைதி

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை நீ

செவ்வாரமுடை சொக்கிடும்   சொண்டுக்காரி


அலெக்சாண்டரீனா பரகீட்  உய்தாக் கிளியாம்

அடர்ந்த காட்டில் வசிக்கும் நீளமானவளாம்

வழலையோ இரண்டாயிரம் ரூபாவாம் கோவை

வஉசி உயிரியல் பூங்காவில் காணலாமாம்


பச்சைக்கிளி பால்சோறு

கொச்சி மஞ்சள் கொஞ்சி விளையாட

அச்சா குழந்தைப் பாடல் வரிகள்

இச்சையாய் இசைந்து பாடுவாராம்.


17-5-2016






புதன், 23 டிசம்பர், 2020

319. (882) மீண்டும் வருவாரோ

 





மீண்டும் வருவாரோ


தீண்டும் துன்பங்களுக்காய் மனமுவந்து

ஆண்டவர் சிலுவையை மறுபடி சுமந்து

மீண்டும் சிலுவையில் அறைந்து நொந்து

தாண்டும் துன்பம் அவருக்கு வேண்டாம்.

தோண் டி   மறுபடியதை  அனுபவிக்க வேண்டாம்.

தோன்றாத் துணையாயவர் சாத்தானை (கோரோனாவை) அழிக்கட்டும்.


தூணெனும் பக்தி மனதுள் நிலைத்திட்டால்

நாணெனும் நம்பிக்கை மலையளவு உயர்ந்திட்டால்

பூணெனும் மனிதநேயம் மனதில் ஊன்றிட்டால்

மீண்டும் வருவாரோ இரட்சகர் பூமிக்கு!

நீண்டிடும் துன்பம் அவருக்கு வேண்டாம்

ஆண்டவர் அங்கிருந்தெமை ஆளுமை செய்யட்டும்


சீண்டும தீய பழக்கங்கள் துஞ்சும்

தொண்டு மனம், தோழமை நெஞ்சம்

கொண்ட வாழ்வினில் ஆண்டவர் மஞ்சம்!

மீண்டும் எதற்கவர் வர வேண்டும்!

தீப்பழக்கங்கள் இல்லாத் தோழமை மனதோர்

வாழ்வில் ஆண்டவனுள்ளார் மீண்டவர் வரமாட்டார்!


(பூணெனும் - ஆபரணம் எனும். )

இலண்டன் தமிழ் வானொலி வியாளன் கவிதை)


18-12.2004





திங்கள், 21 டிசம்பர், 2020

318. (881) நமக்கென்று நால்வர்

 



நமக்கென்று நால்வர்


அழுத்தும் விரலியக்க உலகில்

அனைத்தும் உடனடையும் உலகில்

சுமக்கின்ற பணப்பொதி தேன்.

நமக்கென்று நாலுபேர் ஏன்!


அடுப்புக்கு மூன்று கல்லு

அமைச்சிற்குச் சேவகர் குழு

மலரிற்கு ஒரு தண்டு

மனதிற்கு ஒரு பற்றுக்கோடு.


எமக்கென்ற இக வாழ்வில் 

நிலைக்கின்ற சொந்தம் யார்!

சுமக்கின்ற நாலு பேரா 

நமக்கென்று நாலு பேர்!


அன்பைப் பிழி! பண்பைத்தெளி!

அறிவை அளி! ஆதரவு உளி!

உனக்கென்று நால்வர் அல்ல

உலகில் நாற்பது பேர் உருவாவார்


 29-5-2004

(இலண்டன் தமிழ்வானொலியில் ஒலிபரப்பானது.)





வியாழன், 10 டிசம்பர், 2020

317. (880) ஊடகம் - ஞானம் சஞ்சிகை - ராஐராஐசோழன்

 


ஞானம் சஞ்சிகை - இலங்கையில் இருந்து. எனது கவிதை .
ஞானம் - மனமார்ந்த நன்றி.
----------------
ராஐராஐசோழன்.

திராவிட நாகரீகம் செழித்திருந்த காலம்.
கிரேக்கர்களை இந்தியாவிற்குள் நுழைய
வட இந்தியா தெற்கே கர்நாடகம்
மெனரியப் பேரரசு விடவில்லை.
வரை நீண்டன இராச்சியம்
தமிழ் நாட்டைத் தொட முடியவில்லை
சந்திரகுப்த மெனரியனிலிருந்து
பின் வந்த மன்னர்களால்
அண்ட துளியம் அனுமதிக்கவில்லை
மூவேந்தராம் சேர, சோழ, பாண்டியர்
முரண்பட்டாலுமவர்கள் அயலார் தம்மரசை
சங்ககாலத்துக் கரிகால்சோழன்
வடக்கேயும் கடல் தாண்டி
புலிக்கொடி பறக்க விட்டனர்.
இவர்களின் ஆரம்பப் புள்ளி
காலில் சூடுபட்டு கரிகாலன் ஆகினான்.
சோழன் கரிகாலன் பெருவளத்தான்.
இளமையில் தீயில் அகப்பட்டு
முதியவர் இருவருக்கு நீதிசொல்ல வர
சோழ முதற் கதாநாயகன் இவனே.
இவர் இளையவரென்று அவர்கள்
பின்னின்றது அறிந்து முதியவர் வேடமிட்டு
நீதி சொன்ன சோழனாம் பெருமைமிகு
சேரன் பெருஞ்சேரலாதன் பணிய
அனைவருக்கம் முன் உதாரணமானவன்.
இமயம் வரை படையெடுத்து
இமயத்தில் புலி இலச்சினை பதித்தவன்.
வெண்ணியென்ற ஊரில் போரிட்டு
தமிழகத்தில் கட்டுமான வேலைக்கமர்த்தியவன்.
அரசன் ஒருவனையும் வீழ்த்தினான்.
இலங்கை மீது படையெடுத்தான்.
சிங்களர் பன்னிரண்டாயிரமரைச் சிறைசெய்து
( சங்ககாலத்தில் கரிகாலன்)
19-5-2020










செவ்வாய், 8 டிசம்பர், 2020

316, (879) ஊடகம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்// 'உன்னை நம்பு'

 



உன்னை நம்பு  


தன்னை நம்பாதவன் தாழ்வது

தன்னாட்சியாம் பொதுவிதி! உச்சிச் சூரியனாகு

தன் நிழல் தனக்குள்ளாகாது

தன்னம்பிக்கை வாழ்வின் முதுகு நாண்.


சாதனை வித்தை ஊன்ற

தீதினை, சூதினை வெல்ல

வேதனை துடைத்தெறி! நீயே நீதிபதி!

நாதனை ஆரதனை செய்!


விதையை அழுகவிடுவது சந்தேகம்

விளையாட்டை ஆரம்பத்திலேயே தோற்கடிக்கும்!

வினைத் திறன் சிகரச்சுடர்

வித்தகக் கனவு, இலக்கோடு படியேறு!


நளபாகமான  அசையாத நம்பிக்கை 

நங்கூரமாகி  மனிதனைக் கரையேற்றும்!.

பொங்கும் ஓயா அலையாய் விடாமுயற்சியைத்

தங்கவை உன்னோடு! தாழ்வுமனப்பான்மையோடும்!


சூதுடை சதுரங்கப் பொய்மையழித்து

சூடமாய் அறிவொளி விரித்து

பாடான எண்ணங்கள் மாற்றி உயர்!

நம்பு நஞ்சில்லா உலகு உன்கையில்!


 23-10-2020







428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...