திங்கள், 12 பிப்ரவரி, 2024

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

 


                    



ஆலமர விழுதற்ற அவலநிலை

மனிதக்காட்சிச் சாலை


மிருகக் காட்சிச் சாலை மாறி

மனிதரே மறந்த மனிதம் போனதால்

மனிதக் காட்சிச் சாலை ஆனது

எனின் மிகப் பொருத்தமே


00

கருணை  செய்ந் நன்றி இல்லை

அருமை நட்பு கடைச்சரக்கு நிலை

பெருமை புனிதம் இழந்த பிறவிகள்

திருமை பெறுமா  திருமுறை பாடினும்!

00

வயோதிபர் இல்லமும் மனிதக்

காட்சிச் சாலை எனலாம்!

ஓரங்கட்டும் ஒரிடம் என்பதால் !

யாதும் இழந்த நிலை.

00


அவ்வையார் விருது - வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 9-2-2023









வியாழன், 8 பிப்ரவரி, 2024

427 (960) எழுத்தெனும் பூக்காடு



       


 

             எழுத்தெனும் பூக்காடு


அலைகடல் மனதில் அச்சங்கள்

தலைவிரித்து ஆடினால் எப்படி

நிலைக்கும் சிகரப் படிகள்!

வாழ்க்கைச் சதுரங்கத்தில் பக்குவமாய்

ஆழ்ந்திடில் சுலபமாய் வெற்றியடையலாம்

கற்றுத் தேறும் அறிவு

பற்றி ஊறி உரமாகும்

வெற்றி உறுதியாய்க் கரமிணைக்கும்

00

ஆற்றல் நிறைந்த மனிதன்

ஏற்ற வழியைச் சீரமைத்தால்   

ஒருமைப்பாடான உலகக் கோளமாகும்

பெருமைத் தமிழ்க் கவிதைகள்

கவிதைக் கானகம் அமைக்கும்.

யார் கூறுவார் கானகக் கதையை!

வேரா    நிழலா எது கூறும்!

தமிழின் மரபு  இரும்புக்கோட்டை.

00

திரண்டு களித்த தமிழ்

புரண்ட சுடரினின்றும் உருகுவது

வரண்டிடாத உயிரூட்டும் கனிவொளி

மிரண்டிடாத தொல்பழ அமுதம்

மண்மிசை மானிட மாண்புகள்

தலைக் கனமின்றிப் பெருகட்டும்!

விரிக்கும் சுடரில் கிறங்குதலாய்

விசும்பை விஞ்சட்டும் வித்துவத்துவம்

00

வேதா. இலங்காதிலகம்-தென்மார்க்-7-2-2023






ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

426 ( 959) 3 lines... நீயும் நானும் - கடைசி வரி:-

 



         



       3 lines...

29-1-2018
நீயும் நானும் - கடைசி வரி:-

புனலில் நீந்தும் குளிர்மை பூசும்.
சினமும் விலக்கும் எழிலாம் நேசம்.
நினைவை மயக்கும் அவளின் வாசம் கனவில் விழிகள் கவிதை பேசும்
.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 29-1-2018

{{-

Anuradha Kattabomman வணக்கம். இது கவிதை. ஆற்றின் நீரோட்டம் போல சரளமான சொற்கள். நான்கு வரம �களிலும் முதல் சீர் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை விளையாடுகிறது.📷

நல்ல மரபுக் கவிதை. மூன்றாம் சீர்களில் மோனையும் வந்திருந்தால் சுகமான மரபுக் கவிதையைத் தந்த பெருமை உங்களுக்குக் கிடைத்திருக்கும். எனது எடுத்துக் காட்டு கவிதையைப் படித்துப் பாருங்கள். அடுத்த முறை இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் அம்மா. வாழ்த்துகள். - ''அகன்'' நடுவர்.1

Vetha Langathilakam Anuradha Kattabomman @.. நனவில் மயக்கும் அவளின் வாசம் என்றால்
சரியா சகோதரரே?
மிக்க நன்றி மகிழ்ச்சி.

1 Anuradha Kattabomman:- நனவில் - என்றும் எழுதலாம். நினைவில் என்பதும் எதுகை தான். அம �ு மட்டும் இன்றி மயக்கும் வாசம் என்பதும் நல்ல சொல்லாடலே. வாழ்த்துகள்.





428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...