விகசிக்கட்டும் விக்கினமற்ற காலம்.
போது ஆகி மலர்ந்த ஆக்கங்கள்
ஏதுவான நூலாகிச் சிறகு விரிக்க
பாதுகாப்பாய் கவிதைப் பயணம் ஊர்ந்திட
சூதுகளும் ஒரு பக்கம் புரண்டது.
போதும் என்று கூற முடியாது
சாதுவாக என் பயணமும் செல்ல
சாதுரியமாய் இரண்டாயிரத்துப் பதினெட்டு காற்றாடியாகி
தோதுடையதான மயக்கத்தில் முடிவாகிறது... செல்லட்டும்!..
இனியவைக்கும் இறைவனுக்கும் உதவியோருக்கும் நன்றி
கனியட்டும் மிக உன்னதப் புத்தாண்டு!
எனியோரு நித்தியமான சத்தியமான காலமாய்
குனிவில்லா அரசியல் செழித்துத் தளைக்கட்டும்.
நிம்மதி ஆனந்தம் அமைதி ஒன்றாகி
எம்மதமும் சம்மதமான சமாதானம் திரளட்டும்
விம்மும் மனங்கள் கொண்டாடும் நிலைபெறட்டும்.
விரியட்டும் இரண்டாயிரத்துப் பத்தொன்பது இன்பமாக
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 30-12-2018