புரியாத புதிர்
பல விடயங்கள் புரியாத புதிராகும்
பொல பொல கண்ணீர், பணம்
பலமான நல்ல நோட்டா கள்ளமா
நிலை புரியவில்லை யாவும் புதிர்!
தொலை பேசி இல்லாத காலத்திலும்
நிலையாக மனிதன் வாழ்ந்தான் அன்று.
தொலை பேசியின்றி மனிதன் இன்று
மூச்சுவிட மறப்பது புரியாத புதிர்!
அன்பாகப் பேசினும் அருகு வரார்
அகம் திறக்காது எத்தனை மனிதர்!
அவர் எதனை நம்மிடம் எதிர்பார்க்கிறார்
அனைத்தும் எனக்குப் புரியாத புதிர்!
அதிர வைக்கும் படம், காமம்
கொப்பளிக்கும் படமும் வரிகளும்,
தன் முகத்தை பெயரை மறைப்பதும்
மனநோயா என்பது புரியாத புதிர்!
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 13-6-2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக