அன்பாதரவை நிறையுங்கள்
ஆணும் பெண்ணும் ஒன்றாகித் தம்
சுயம் மழுங்க ஒருவரில் ஒருவர்
கரைந்து அழகாய்க் குடும்பம் சமைக்கிறார்கள்.
பிள்ளைகளுக்காகவும் நாளும் தேய்கிறார்கள்.இதை
மதித்துப் போற்றினால் அன்பாளராகிறார்கள் அன்றி
அவமதித்து அடிமையாய் நடத்தினால் விலகி
ஆக்கினையால் ஓடுகிறார்கள் பிரிவினைப் பாலைவனம்.
புரிந்துணர்வு புனிதமாகினால் புகழ் பூக்கும்.
00
திறமையெனும் புதையல் வறுமையின்றி மனிதனையாக்கும்.
பிறவியில் அன்பாதரவு நிறைந்தவன் பிழைப்பான்.
அல்லாதவர் முன்னேற்றம் இழந்து துன்புறுவார்.
தேடலே மனநிறைவு கூடலே உறவு.
வாடல் ஏமாற்றம் பாடல் கலைகளாக
நாடலே வாழ்வாகி ஆடலாய் ஆனந்திக்கலாம்.
சாடுதலில் மனம் வெதும்பி நாளை
மூடுதலில் என்ன இன்பம் காணலாம்!
00
திருமதி வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 30-1-2024