காற்றுவெளிக்கு மனமார்ந்த நன்றி. வாழ்க! வளர்க!
செனித்தலின் சென்ம பலன்.
திருவுடை வானம் போல
அருமையாய் நீந்திய அலை
உருப்பெற்ற உல்லாசப் பன்னீர்
எவரும் தொடமுடியாதது.
கருவில் இருந்து வெளியேறிப்
பெரும் சத்தத்தில் கலந்தோம்.
பூப்போல கரத்தில் ஏந்தினர்.
பூசைப் பொருளாய் அன்பிலாடுவோம்
பூமியில் பிறத்தல் மகிழ்வு
பூரிக்கும் மனிதப் பூவாகுதல்
பூக்கும் ஒரு நிகழ்வு.
மெல்ல மெல்ல அகர
வில்லெறிதலில் தொடக்கம்
வல்லமை, அதிகார ஏளனத்
தோல்வி ஆயுதம், இளக்காரம்
சொல்லதிகாரச் சிம்மாசன அமர்வு.
வீழ்புனல் வாழ்வில் சிறகடித்து
ஆழ்ந்திடாது உயரப் பறக்கும்
மூழ்குதலற்ற வாழ்வு இது
வீழ்ந்திடாதே! பரமபத ஆட்டமிது!
தாழ்ந்திடாது தூசகற்றி எழுதலுயர்வு.!
இனித்தமுடைய எண்ணச் சொற்கடலுள்
அனித்தமுடை(நிலையில்லாத) வாழ்வை வெல்லுதலில்
குனித்தல் (வளைதல்) நிமிர்தலாய்ச் சாகசங்கள்
தனித்துத் தடுக்காது தொடர்தல்
செனித்தலின் சென்ம புண்ணியமே.
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 16-8-2020