கிறுக்கல் சித்திரங்கள்.
சரிவாய், நேராய், வரிவரியாய் கற்பனைகள்
சரியிது என்று கிறுக்கும் கிறுக்கல்கள்
சிரிக்கும் குழந்தை மனதில் மத்தாப்பு
விரிக்கும்! மகிழ்ச்சி ஊற்று சிதறும்!
தரித்து நிலைக்கும் தானொரு ஓவியரென!
உருவில்லாக் கிறுக்கல் கற்பனை முதலடிக்கு
பெருமூக்கம் கொடுத்து உயர்த்தல் ஏணியாகும்.
உருவகம் கொடுத்து விவரித்தால் கண்கள்
பெரிய முட்டையாக ஒளிரும் கவிதையுயரும்
அரும் கிறுக்கல் சித்திரமும் இரவிவர்மனாக்கும்.
பிள்ளைகளின் விரல்கள் இயங்கும் வலிமை
தள்ளும் விதமாகச் சித்திரம் விரியும்
பிள்ளை மனஎண்ணமே கிறுக்கலாய் விரியும்.
அள்ளி எடுத்து ஆய்கிறார்கள் மனவியலாளர்
வெள்ளி நிலவாக மின்னட்டுமிது சுவரெல்லாம்.
15-5-2018
Shanmugam Vanjilingam :- பிள்ளைகள் விரல்கள் இயங்கும் வலிமை
பதிலளிநீக்குதள்ளும் விதத்தில்
சித்திரம் விரியும்..
சிறப்பு கவியே
வாழ்த்துகள்
2018.
Vetha:- mikka nanry . Makilchchy..bro-