ஞாயிறு, 28 ஜூலை, 2019

148. (722) முட்கம்பி.








முட்கம்பி.

கட்டுப்பாடு, காட்டுக்கூச்சல் கர்வம்
எட்ட முடியவில்லை அன்பால்.
சுட்ட தோசையும் சரியில்லையாம்.
பட்ட மனமெப்படி வந்தது!

சுட்டுத் தடுமாறியும் நிமிர
திட்டமிடுகிறது என் மனம்.
பட்டு அன்பற்ற வாழ்வு
வெட்ட வெளிச்சமற்ற முட்கம்பியே! 

பிள்ளையைக் கண்டதும் எகிறுகிறார்.
அள்ளி எடுத்தணைக்கும் பிள்ளை
அலறுகிறது அப்பனுருக் கண்டு.
அப்படியிருக்கு முள்ளாக அப்பனன்பு 

அயல் வீட்டு அண்ணாச்சியோடு
அன்பு பாசமாய் பேசேலாது
அடைச்சு வெச்ச ஆடாகநான்
உள்ளே முட்கம்பி யுள்ளே.

தம்பி வெளியே  போனாரு
வம்போ படலையைச் சாத்தவில்லை
தெருமாடு உள்ளே புகுந்தது
முட்கம்பி வேலி இருந்தும்

வளர்ந்த கீரைப் பாத்தியெல்லாம்
மிதித்துப் பசியாறிச் சென்றது
துட்டுத்தரும் கீரையெல்லாம் போச்சே!
முள் குத்தியதாயாச்சே!

முட்கம்பி இல்லாமலே பலர்
முள்வேலியுள்ளே! உறவு ஊர் 
பிரிந்த அவல வாழ்வதில்
புலம்பெயர்ந்த நாமுமொரு வகையே!

16-7-2016





1 கருத்து:

  1. முட்கம்பி இல்லாமலே பலர்
    முள்வேலியுள்ளே! உறவு ஊர்
    பிரிந்த அவல வாழ்வதில்
    புலம்பெயர்ந்த நாமுமொரு வகையே!

    உண்மை

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு