புதன், 24 ஜூலை, 2019

144. (720 ) தூரிகை






 தூரிகை

(1. சாரிகை - கவசம் .2. பேரிகை - முரசு .3. பூரிகை - ஊதுகுழல். 4. சேரிகை - ஊர். 5. தூரிகை - எழுதுகோல்.)

தூரிகையால் வண்ணச் சாயமிடும் ஓவியன்
காரிகையை,   கவின் இயற்கையை கருவாக்குவான்.
தூரிகை எழுத்தாளன் படைக்கலம். சமுதாயச்
சாரிகையாகவும் சமயத்தில் சுழலும் கோல்.

பூரிகையாகவும் நீதிப் பேரிகை கொட்டும்.
தூரிகைத் தடமெழுத்தால்,    வண்ணத்தால் ஆழருத்தமுடையது.
சேரிகைக்கு வெகு ஆதாயமாகும் கருவி.
நாரிகையென் தூரிகை தமிழுக்காய் தமிழெழுதும்
.
14-2-2017








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...