ஞாயிறு, 14 ஜூலை, 2019

136. (712) என்ன தவம் செய்தனை






   என்ன தவம் செய்தனை

இன்பத்தமிழோடு நாளும் இசைந்து இணைந்திட
என்ன தவம் செய்தனை என்கிறார்
கன்னல் மொழியின் இனிமையே அனந்தம்
அன்னைத்தமிழை ஏந்திச் சீராட்டுதல் ஆனந்தமே.

ஆனந்தமே  தினம் ஆராதித்திடு உயர்வாய்
ஆனந்தபரவசமே  தேடலும் ஆராய்தலும் திருவாசகமாய்
ஆனந்தி என்ற தாமிர பரணியாற்றின்
வானந்தம் போன்ற தமிழெமது தவமே.

எமது தவமே நல்ல பெறறவரமைவு
எனது தவமே நல்ல கவியமைவு
என்ன தவம் செய்தனை  மனிதனாக!
பின்னும் பிறர் கூற்றும் வரமே.

வரமே நண்பர்களின் வாசியான கூட்டமைவு
தரமே வாழ்வில்  கலைகளின் ஊட்டம்.
உரமே  வாழ்வின் உயர்விற்கு ஊக்கமாய்
சரமென எழுந்து சாதிக்கும் ஓவியங்கள்.

ஓவியங்கள் வரைந்திடவும் தேவை தவம்
காவியமாகும்  வாழ்வின் கற்பனைப் பேறுகள்
ஆவியுடன் ஒன்றிணையும் திறமை, ஊக்கம்
தாவி  அணையுங்கள் தவப்பேறு வாழ்வை

4-8-2018




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு