செவ்வாய், 9 ஜூலை, 2019

134 (710) எப்படிப் புரிய வைப்பது!







எப்படிப் புரிய வைப்பது!

செப்படி வித்தை உலகில் வாழ
தப்படியின்றிக் காலடி நீள
வைப்படி சீரென வைக்கும் அசையை
எப்படிப் பரிய வைப்பேன் உமக்கு!
முப்படியேற ஈரடி சறுக்கும்
அப்படிக் குளறுபடி இன்றைய உலகு.

கேட்டல் புரிதல் மனிதப் பண்பு
கேட்டாலும் புரியாது நடித்தல் வீம்பு.
ஊட்டும் நல்வழி சிலருக்குத் தப்பு.
காட்டில் மழை தான் நல்ல நினைப்பு.
கூட்டில் பறவையான மனதின் தவிப்பு
வாட்டுது வேதனை தெளிவது எப்போது.

வேப்பமரத்தடி மண்ணை அளைந்து
அப்பா அம்மாவுடன் அளவளாவிய தமிழை
அப்படி விலக்கி அன்னிய மொழியை
முப்பொழுதும் மொழிந்து பிணைந்து மகிழ்ந்தால்
எப்படித் தமிழ் மேற்குலகில் வாழுமென்று
எப்படிப் பரியவைப்பேன் உமக்கு!.

5-4-2006.
திண்ணை இணையத்திற்கு எழுதிய கவிதை 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு