திங்கள், 8 ஜூலை, 2019

129.. (706) சங்கே முழங்கு.








சங்கே முழங்கு.

முத்தமிழ்  படி எத்தவறுமற்றபடி
சொத்தையின்றி ஊன்றிப் படி
பண்டைத் தமிழாம் சங்கத் 
தமிழென்று ஊது சங்கே!

உயிர் மெய்யாய் உயர்வாய்
பயிரிட்டு உயிர்ப்பித்தே வேராய்
உயிர் மூச்சான மொழியென்று
ஊது சங்கே  ஊது!

தமிழ்த்தேன் சுவைத்தேன் மலர்ந்தேன்
களித்தேன் மலைத்தேன் இது
இலக்கியத்தேன் அரும் தேனென்று
ஊது சங்கே ஊது!

7-6-2016





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...