இணையத்தள, முகநூல் உறவுகள்- எமது உறவினர் நண்பர்களுக்கு எல்லோருக்கும் தைத் திருநாள் வாழ்த்துகள்.
இனியொரு புதிய தை - 2020
இனியென்ன புதிய தை இரண்டாயிரத்து இருபது
இணைந்தாடுது எம்முடன் இசைவாகத் தொடரட்டும்
வெள்ளைப்பனி மூடாத ஒரு நத்தாருடன்
உள்ளே வருகிறாய் கள்ளமின்றி உறவாடுவாயா
சிற்றலகால் சிறுகச் சிறுகக் கொத்தி வெளியான
புத்தம்புதுக் குஞ்சாய்ப் புது தையே நிற்கிறாய்!
அந்தகார இருட்டிலொரு சுந்தர ஒளியாயெமக்கு
இந்தப் புதுத்தை வந்து குந்தட்டும் நலமாக.
ஒரு இனத்தின் மனிதநேயத்தைக் கருவறுக்காத
அருமைத் தையாக உரிமைகள் தரட்டும்
ஞாபக வீதியில் ஞானமுத்திரை பதிக்கும்
ஞானஒளியாக வா! ஞானசூனியமாக அல்ல
எம்மதி மகிழ்ந்திட நிம்மதி சுமந்து வா!
அம்சமாய்த் துரோகம் விரோதமழித்து வா!
இம்சையான வேற்றுமை நீங்க வா!
சம்பூரண ஒற்றுமை, ஆரோக்கியமேந்தி வா!
கவிச்சுடர் வேதா. இலங்காதிலகம்.
தை தை என( வளரிக்கு)
தை தையெனத் தைமகள் வருகிறாள்
தரணியில் நாம் மகிழத் தைமகள் வருகிறாள்.
தம் மகிழ்வை தரமாக உழவர்கள்
தைப்பொங்கல் நாமம் சூட்டிய நாள்
தகவுடன் வெளிப்பாடு காட்டும் நிகழ்வை
பகையினை விதைத்துப் பகுதியாய் வளர்த்து
வையகம் கொண்டாடும் தமிழர் திருநாள்.
பங்கு போடும் மனநிலை எரித்து
பகிர்வோம் நம் அன்பைத் தொகுத்து
பாங்காக நமது பண்பை வளர்த்து
பக்குவமாய் பல திறமைகள் விரித்து
இளமையை மனதிலூட்டும் இன்பப் பொங்கலிது.
பங்கிடுவோம் தித்திப்புப் பொங்கலைச் சிரித்து
உழவர்கள் கொண்டாட உவகை தந்திடும்
உழைத்த மக்கள் உறவுகளோடு புத்தரிசிப்
மனைகள், மாட்டுத் தொழுவங்கள் சுத்தமாக்கி
மாவிலைத் தோரணங்கள் ஆடும் தையிது
பகலவனுக்கு நன்றி கூறி எத்திக்கும்
பொங்கல் பகிர்ந்துண்ணும் ஆனந்தத் தையிது
தை பிறந்தால் வழி பிறக்கும்
தை பிறந்தால் பொங்கல் வரும்
மைவிpயும் எதிர் பார்க்கும்
கைகளிலும் புது வேகம் வரும்
உழவன் பூரித்து மகிழும் தை
டென்மார்க்.13-1-2009- வளரிக்கு மின்னஞ்சல் 22-12-19
கவிச்சுடர் வேதா. இலங்காதிலகம்
வளரி சஞ்சிகைக்கு மனமார்ந்த நன்றி