வெள்ளி, 31 ஜனவரி, 2020

249. (812 ) (ஊடகம் - ஓம் கிறீன்லாந்தா!







ஓம்  கிறீன்லாந்தா! 

ஆன்மார்த்த பூசை ஆளுமையென
ஆன்றோர்களையும் ஏமாற்றும் ஆடைகளா!
ஆலவட்டமாய் சமய ஆரத்தியுடன்
ஆசை வார்த்தைகள்  ஆகமமா!

அடக்கம், பண்பாடுகள் தடுக்கி
முடங்கும்  வாலிப முயற்சி
முழு   உலகையும்  முகிழ்த்தி
முக்குளிக்கும் தவறான பாலுறவா!

சிறுவர்கள், இளையவர்களை  சிதைக்க
பொறுமையாய் மூளைச்சலவையில்  பொருத்தி
வறுமையற்றுப் பணம் வறுகிட
வாய்ப்பென உலகைக்  குழப்புகிறாரா!

எண்ணற்ற குற்றங்களை ஒழித்திட 
கண்களைக் கட்டிக்  கும்மாளமா!
அனாயாசமாய் உலகை அனுபவிக்க 
பனாமா, கிறீன்லாந்தெனத் தனித்தீவா!

குறளி  வித்தைகளால் உலகை
அறவழியென ஆட்டும் ஆசாடபூதிகளா!
சிறந்த சுயபுத்தியைத் தீட்டுங்கள்  மக்களே!
திறனுடன் சுயகாலில் வாழுங்கள்!

  10-12- 2019










5 கருத்துகள்:

  1. சிறந்த சுயபுத்தியைத் தீட்டுங்கள் மக்களே!
    திறனுடன் சுயகாலில் வாழுங்கள்!


    அருமை

    பதிலளிநீக்கு
  2. Kugananthaluxmy Ganesan :ஆசாடபூதிகளுக்கு அடுக்குவரிகளால் அபார அடிகள். சுயபுத்தி கெ ாள்ளட்டும் மக்கள். நன்றி சகே ாதரி.
    6-2-2020
    Vetha Langathilakam :- ஆமாம் சகோதரி குடைந்து கொண்டே இருந்தது
    அதனால் எழுதினேன்.
    அன்புடன் மகிழ்ச்சி!...
    6-2-2020
    Kugananthaluxmy Ganesan:- Vetha Langathilakam இன்று நான் உங்கள் இணையமும் தேடிச்சில வாசித்து இன்புற்றேன். பயன் பெற்றேன்.
    6-2-2020
    Vetha Langathilakam :- 3 web sites...

    பதிலளிநீக்கு

  3. Subi Narendran :- அருமையான கவிதை வரிகள்!
    13-2-2020
    Vetha Langathilakam:-
    Thank you Subi.

    பதிலளிநீக்கு
  4. Shanthy Bala :- அறவெளியென ஆட்டும்
    ஆசாடபூதிகளுக்கும் ,
    சுயபுத்தியில்லாமல் நடக்கும் மக்களுக்கும் அருமையான கவிதை.....
    பாராட்டுக்கள் சகோதரி
    13-2-2020
    Vetha Langathilakam :- இதற்குத் தங்கள் கருத்தை விரும்பினேன்
    அது தான் இணைப்புப் போட்டேன்.
    நெடுகப் போடும் வழக்கமில்லாதவள்.
    மிக மகிழ்ச்சி நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு