புதன், 22 ஜனவரி, 2020

246 . (809 ) ஆ(வா)சியுடை வாசிப்பு







ஆ(வா)சியுடை வாசிப்பு

வாசிக்க வாசிக்க மன பாசிப்படை விலகும்
தூசியும் கரையொதுங்கும் யோசிக்குமுணர்வு பெருகும்.
யோசிக்க சந்தேகமுயரும்  யோகமான தேடல் பெருகும்
வாய்ப்புகளெம்மை நெருங்கும் வாய்த்திடும் பல நிகழ்வுகள்

வாத்தியாராகும்   இன்பம் துன்பம் நேத்திரம் திறக்க வைக்கும்.
காத்திரமான அனுபவப்பாடம் கோத்திடும் மனப் பக்குவம்.
பூவெனப் பயன்பாடு பூக்கம் பூவாசமதிப்புப் பெருகும்
பூரண மகிழ்வுமலரும்பூச10டும் செழுமை வாசிப்பால்

உன்னை மறப்பாய்! உலகை அளப்பாய்!
ஊற்றான அறிவால் உண்மை உணர்வாய்!
வாசிப்பு வாசம் இதமானது  .ஆனந்தவாசியாக்குகிறது.
எவ்வளவு வாசியான நிலைமை அது!

2-4-2009
(5-4-2009 முத்துக்கமலம்.கொம்)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு