உன்னத உணர்வு ----- எதிர்பாராத மழை
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆக்கங்களையும் மிகுந்த தேடுதலுடன் தான் எழுதி முடிக்கின்றனர். செய்து முடிக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை நான் இங்கு பார்க்கும் ஆக்கங்கள் கவிதைகள் - குடும்ப நிகழ்வுகள் ( திருமணம்-பிறந்தநாள்-மரணம்) உட்பட என்னால் முடிந்தளவு கருத்துகளிடுவேன்.
முடிந்தவரை இன்தமிழோடு பயணிக்கும் ஆசை. ஆக்கம் ஏற்றிய மனதின் உணர்தல் ஆனந்தமாகவே உணரப்படும.; மேன்மை உயர்வான அந்த உணர்வால் கருத்து நிறைந்த மனதில் திருப்தி வழியும்.
பலர் எனது இணையத் தளத்திற்கு வருவதேயில்லை. அவர்கள் மின்னஞ்சல் மட்டும் வந்தபடியே இருக்கும் தமக்கு இணையத்தளத்தில் கருத்திடுமாறு. நான் அவர்களுக்குக் கருத்துக்கேட்டு மின்னஞ்சல் அனுப்புவதில்லை. விரும்பினால் அவர்கள் வரலாம்.
பலர் முகப்புத்தகம் விட்டு விலகி வாட்;ஸ் அப்--இன்ஸ்ரகிறாம் என்று உலவுகின்றனர் - பருவமாற்றம் - பழகும் மாற்றம் என்றாக. அது அவரவர் விருப்பம்.
உறவு தேடியவர்கள் ஒதுங்குவதாக – வாழ்வு முறையே மாறுவதாக கொறோனா வந்த மாதிரி அனைத்தும் மாறுகிறது.
விசித்திர உலகம். மெய்யாகத் தெரிந்தது எல்லாம் பொய்யாக மாறும் காலம். கலகலச் சிரிப்பு மௌனமாகிறது ஆயினும் அன்பு ஒரு கைத்தடி தான்.
கருத்துகள் வாழ்த்துகள் ஒரு நதி போலத் தான். வளைந்து இறுக்கமாகியும் நீண்டு வேகமாகியும் அசையும். நிறங்களும் கொடுக்கும்.
அநாதையாகும் பொன் பூத்த கவிதைகளும் உண்டு. கருத்;திடக் கூட்டங்களும் உண்டு. நற்குணமாய் நயந்து நல்வாழ்த்தும் நவில்வாருமுண்டு. நிற்கதியாய்க் கவிதை நிற்காமலும் போவதுமுண்டு. கற்றவர்கள் கருத்துச் சாமரத்தால் கலையரங்கமாயும் குற்றமின்றியும் விசிறுவார்கள். கற்ற பெருமையது. பற்பலவாய்ப் பாராட்டும் பாராமுகமும் பெருமையான கைமாறாய்ப் பேறு கொள்வார் பலரும். கருத்தின்றேல் தமிழ் சாகாது.
ஊக்கமளிக்கும் பேச்சும் - செயலும் வரமே. முயற்சியே முன்னேற இடம் தரும். நல்ல அன்புச் சங்கமமே ஊக்கமளிக்கும் சிரஞ்சீவி அமிர்தம்.
நன்கு புரிந்தவர்கள் நட்பில் நிறைவு உண்டு. புரியாதவர்கள் நட்பு நாடகம் தான்.; எதிர்பாராத மழை தான் நட்பின் மன விரிப்பும்.
24-8-2021