நேர்படப் பேசு
கூர்மையாக நீதிவழியாகக் கூறுங்கள்
ஆர்வமுடை வரிகளைத் தினம்
நேர்பட வீசுங்கள் நல் விதையை
ஊர்ப்பிள்ளைகள் விருத்தி உளவியலுக்காக
ஓளவையின் ஆத்திசூடிஇ கொன்றை வேந்தன்
பையப்பைய மூதுரை நல்வழியும்
தைரியம் நேர்மை வண்ணங்களை
வைரமாய் மனதில் உருவாக்கும்.
திருக்குறள் கலப்பையால் மனதைத்
திரு பெற உழுவதால் பாலைமனம்
திருந்தி சோலைவனமாகும் நல் விளைச்சலால்.
திருமை பெறுகிறது செந்தமிழாக
பாரதியார் வந்தார் பாநூறெனப்பாடி
சாரதியானார் தமிழ்வீதியில் செருக்காக
ஊரதிர இன்பத் தமிழ்த்தேன் சிந்தினார்.
நிமிர்ந்து நில் நேர்படப் பேசென்றார்.
தமிழ்வானம் சிறக்கநாமெல்லாம்
அமிழ்தினும் இனிய தமிழால்
அகிலம் எங்கும் சிறகடிக்கிறோம்
பேசுங்கள் தமிழைப்பாடிப் பறவையாகுங்கள்.
3-1-2020