அது தான் அம்மா
00
தென்னையளவு கிணறு ஆழம்
என் தலை சுற்றியது
கிணற்றில் நிலா பளிங்காக
திணறவைத்தது தொடமுடியாது! அதுதான் அம்மா
00
ஆகாய நட்சத்திரங்களை எண்ணி
அம்மா மடியில் துயில வேண்டும்
அதிகாலை துயில் நீங்கிட
அம்மா கைத் தேநீர் வெண்டும்
00
ஆசை வரிகளிவை ஏக்கத்தில்
அம்மாவை கனவில் கண்டால்
ஆருயிர் அமைதியுறும்
ஆகக் கூடிய சிறந்த வழி
00
இலண்டன் தமிழ் வானொலியில் காலைத் தென்றலில் சகோதரி சாயிபா பாடியது.இஇஇஇஇஇ6-6-2004
(மாலைத் தென்றல் நீயெனக்கு
மயக்கும் முல்லை நீயெனக்கு
மந்திரமொழி நீயெனக்கு
யந்திரக் காப்பு நீயெனக்கு
0;0
உயிரோடிவை மொழிந்திட
உணர்வாயுன்னை அணைத்திட
உணர்ந்திட உருவமாய் நீயில்லை
உறைந்துள்ளாய் அம்மா என்னுள்ளே
00
காலம் கடந்த ஞானம் தான்
சீலம் உலகிற்குத் தரட்டுமே தூண்
ஆலம்; விழுதான தாய்ப் பாசத்தேன்
ஞாலம் முழுதும் பரவட்டுமே
00
நெஞ்சில் நிறைந்தவள் நீ
நினைவில் கலந்தவள் நீ
கொஞ்சும் நெஞ்சினள் நீ
பஞ்சாக எனை;னை ஏந்தியவள்)
16.8.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக