ஞாயிறு, 28 ஜூலை, 2019

150 .. (724) கிணற்றைக் காணவில்லை.







கிணற்றைக் காணவில்லை.

ஊருக்குள் ஒன்று இரண்டு கிணறுகளே
உன்னத நன்னீர்க் கிணறுகள் ஆகிறது.

உவர்நீர்க் கிணறாவது மண்ணின் இயல்பு.
ஊரார்  நல்ல நீரே தேடுவர்.

எங்களுடையது நல்ல நீர்க் கிணறு.
எமிலி, பார்வதியென ஊராரும் வருவார்

காலை மாலையெனக் கூட்டுறவுக் கலகலப்பு.
அக்கா மாமியென அம்மாவோடு உறவாடுவார்.

கிணற்றடியில் பெரிய சீமெந்து வக்கு.
இணங்கி அப்பா தண்ணீர் நிறைப்பார்.

தொட்டியில் படுத்து குளித்து விளையாடுவோம்.
தொடருமின்ப அனுபவம் கனவிலும் இன்று.

கிணறு இறைத்துத் துப்புரவு செய்ய
கயிறு பிடித்துள்ளே அப்பா இறங்குவார்.

மஞ்சள் பாம்பு முட்டைகளும் இருக்கும்
பட்ட கிடங்கு துப்புரவு சாம்பிராணியுமிடுவார்.

பத்திர மனதுடன் பார்த்தபடி நிற்பேன்
பயத்தோடு அப்பா மேலேறும் வரை.

கிணறு தண்ணீரென்றால் வெகு பயமெனக்கு
முப்பதடி ஆழம் திடுக்கிடும் நினைவு.

சுனாமி வந்து இடம் பெயர்ந்தோம்.
படிப்பு, வேலை, வெளிநாடாய் ஆச்சு.

ஆமி பாதுகாப்பு எல்லையாச்சுது இடம்.
மாமி சென்று சமீபத்தில் பார்த்தார்.

வீடு இடிந்தாம். கிணற்றைக் காணவில்லையாம்.
காடாக வளவாம். '' ஸ்கைப்பில் '' அழுதிட்டோம்.

வீடுடைத்த கல்லும் மண்ணுமா! சுற்றியுள்ளோரின்
காணாமற் போனோரின் உடலம் கிணற்றிலா!

எப்படி அந்த ஆழக் கிணற்றை
எதைப் போட்டு மூடித் தொலைத்தார்!

செப்படி வித்தைக்காரரின் செயலானது அநியாயம்...
எப்படியும் கேட்பான் முனியாண்டி!....
உப்பு தின்றவன்......

18.9-2016




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு