திங்கள், 22 ஜனவரி, 2024

422 ( 955) நான்- 1- 2

           


               




    நான் - 1


நான் யாரெனும் தன்னறிவு நன்மை.

நான் முயல் நான் எறும்பு

நான் திமிரற்றவள் மானம் உள்ளவள்.

நான் படித்தேன் யாழ் கோப்பாயில்.

நான் கட்டுரை கவிதைகள் எழுதுகிறேன்.

விண்மீன்களாய் என்னை சுற்றுது அவைகள்.

நான் உன் அன்பை நினைத்து

என்னை மறக்கிறேன் இது காதல்.


இயற்கை அழகில் தொலையும் நான்

இசையும் கவியில் மயங்கும் நான்

அசையும் மழலையில் உருகும் நான்

அகவும் மயிலை ரசிக்கும் நான்

நான் (தன்)முனைப்பு நீக்கும் நான்

தன்னான்ம உணர்வு பெறுவது தெளிவு.

தான் என்ற கர்வ அழிவில்

நான் என்பது இனிமை கீதமாகும்.


பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம் -டென்மார்க் - 9-9-2015

-----------------------------------


நான் - 2


நான் ஒரு மனிதனின் நாண்.

நான் எனும் உணர்வற்றவன் வீண்.

நான் எது! நானிந்த உடல்

நான் யார்! நான் மனச்சாட்சி.

நான் தலைக்கன அகந்தையுடன் இணையின்

ஊன் தான் ஒரு மனிதன்.

நான் பிரமம் என்கிறான் வேதாந்தி

நான் பிரமம் என்பது யோகநிலை.


நான் என்பதன் அடையாளம் நாமமாகிறது.

நான் தன்னம்பிக்கைத் தூண் ஆகிறது.

நான் எனதென உரிமை கொண்டாடுகிறது.

நான் நீ சேர்ந்தால் நாமாகிறது.

பெயர் அழைத்து யார் என்பது

துயரின்றி சிலிர்ப்பாய் தான் ஆகிறது.

நத்தை ஓட்டினுள் ஒழிய இயலாது

செத்தை தான் நானற்ற பதிலானது.


நான் கட்டுப்படும் நேர்மை பண்பில்.

நான் விட்டுக் கொடுக்கும் அன்பினில்

மன்னிக்கும் மனம் கொண்ட நான்

மின்னிடும் சூரியக் கதிரான வான்.

நான் நீ சேர்ந்தால் காதல்

என் பெற்றோரின் நல் வளர்ப்பிலும்

வீண் வம்பற்ற சூழலாலும் பண்புடன்

நான் நல்லவன் ஆவது திண்ணம்.


பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம். - டென்மார்க். -22-9-2015






1 கருத்து:


  1. Kanagasegaram Vimalasegaram
    wish photo 24-1-2024
    Ampalavan Puvanenthiran
    நானாக நானில்லை
    நான் என்னை விலகவில்லை
    நான் விலகினால்
    நான் நானாயிருப்பேன்
    - பாராட்டுகள் சகோ.!✌️
    24-1-2024
    Naguleswarar Satha
    Nice photos Acca!
    24-1-2024
    Vetha Langathilakam
    Naguleswarar Satha

    Vetha Langathilakam
    cholla took these pics
    y
    Naguleswarar Satha
    Oh very clever!

    Raji Krish
    Lovely ma.
    24-1-2024
    Sivaneswary Sivarasah
    Nice

    Gowry Sivapalan
    wish pic
    Sandradevi Thirunavukkarasu
    wish pic
    Vetha Langathilakam
    May be an image of 2 people and text

    Vetha Langathilakam
    May be an image of text that says 'Baskar Bass சிறப்பு மா வாழ்த்துகள் Like Reply 21m lop Contributor Vetha Langathilakam Author Thank You 22-1-2024'
    24-1-2024
    Vetha Langathilakam
    May be an image of text that says 'Latha Babu Admin Top Contributor Follow 23-1-2024 NGE'


    Vetha Langathilakam
    May be a doodle of flower and text that says 'Stella Paulraj 23-1-2024 1h Like Reply Share Write a public reply...'
    25-1-2024
    Vetha Langathilakam
    Sivasubbu Kannan Meenakshisundaram
    எனக்குப் பிடித்த நான் ❤️
    23-1-2024
    Vetha Langathilakam
    Author
    Sivasubbu Kannan Meenakshisundaram anpudan mikka nanry

    Vetha Langathilakam
    Kotteeswaran C
    Top Contributor
    red rose photo
    Kotteeswaran C
    Top Contributor
    உங்களின் நான் என்ற தலைப்பில் பல நானின் விளக்கங்களிருந்தும், திரும்ப திரும்ப அந்த நான் என்ற வார்த்தை பயன்பாட்டில் வருவதால் அந்த எழுத்தின் வலிமை சற்று மட்டுப்படுவதாக தெரிகின்றது.
    மீண்டும் ஒரு முறை நான்களை அகற்றி உங்கள் கருத்துகளைத் தெளிவுடன் கோர்த்தால் உங்களின் சிந்தனை சிறப்பாக எடுபடும் என்பது எனது கருத்து. முயன்று பாருங்கள் உங்கள் எழுத்துகளும் எண்ணத்தின் வெளிப்பாடும் மிகச் சிறப்பாக அமையும்.
    வாழ்த்துகள் சகோதரி.
    23-1-2024
    Vetha Langathilakam
    Author
    Kotteeswaran C மிக்க நன்றி.
    நேரம் எடுத்து முயற்சிக்கிறேன்

    Vetha Langathilakam
    23-1-2024
    Kotteeswaran C
    Top Contributor
    Vetha Langathilakam தரமான எண்ண ஓட்டம் உங்கள் கருத்திலிருக்கின்றது, கவிதையில் எழுதப் பட்ட வார்த்தைகளே மீண்டும் இடம் பெறாத படி புது வார்த்தைகளை தேடி போட்டு பழக தரம் மேலும் உயரும். முதல் மூன்று வரிக் கவிதை என்று தொடங்கி, அதையே தொடர் எண்ணங்களின் கூட்டாக வரிகளை அதிகப்படுத்த நம் எண்ணத்தை வேகு விரைவில் சுருக்கமான கவிதையாக தர இயலும்.
    தவறாக என் கருத்தை எடுக்காமல் புரிதலுடன் பதில் பதிவிட்டதற்கு நன்றிங்க.
    வாழ்த்துகள். தொடர்ந்து தளத்தில் வரும் கவிதைகளைப் படித்தால் உங்களுக்கே புரியும்.

    Vetha Langathilakam
    Author
    nanry..nanry.....vaalka valamudan

    Vetha Langathilakam
    May be an image of text that says 'Lakshmi Sundar Admin Group expert in Books & Literature [CTX] +1 23-1-2024 14h Like Reply Vetha Langathilakam Author Top Contributor Than'
    25-1-2024
    Vetha Langathilakam
    May be an image of 1 person and text that says 'Panneerselvam Tamilpoet Top Contributor 23-1-2024'

    Vetha Langathilakam
    2d
    Reply
    Jeya Pathmananthan
    நான் என்ற அகந்தையும் ஆணவமும் பிடித்து அழித்தவர்கள் பல கோடி நான் என்ற ஆணவம் செத்தவர்கள் .படைத்த படைப்புக்கள் இன்றும் உலகத்தில் வாழ்கின்றது. சிலைவடிக்கும்சிப்பி சிந்தனைச்சிப்பி ஆனான் அவர் சாக்கிரட்டீஸ் . நீட்ஷே . கெளதம புத்தன் யேசு இவர்கள் யார்? மாபெரும் தத்துவஞானிகள் மண்ணில் துன்பங்கள்களை சுமந்தவர்கள் சுமந்தவர்கள் நான் என்ற ஆணவத்ததை அழிக்க அதற்காக தன்னை துன்ப்படுத்தியவரையும் மன்னித்தவர்கள் இதனால் இன்றும் மண்ணில் வாழ்கின்றார்கள் இவர்கள் போல நாம் யாரைக் கண்டோம் இந்த மண்ணில் சுயநலத்தின் உச்சங்கள் நான் கவிஞன்!! நான் எழுத்தாளன்!! நான் மேடைப் பேச்சாளர்!! நான் பெரிய அரசியல் நிபுணர்கள்!! இப்படி நான் என்ற தலைகணத்தில் தனக்கு தானே பட்டம் சூடிய வர்கள் ஆயிரம் ஆதலால் நான் மட்டும் வாழும் உலகத்தை பார்க்க .சிரிப்பு வருகிறது நண்பி!!


    Vetha Langathilakam
    Rashid Ahmed
    Top Contributor
    அருமை...அருமை...
    பேரருமை..!👌👌👌

    Vetha Langathilakam
    மிக்க நன்றி.
    பேரன்பு

    Vetha Langathilakam
    Natarajan Kn
    Top Contributor
    நான் நான் என்று உணர்ந்து கூறியது நான் ஒழியத்தான் என்று அறிந்து நான்கூறும்
    காலை வணக்கம்
    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
    with red rose photo

    Sasidevi Riise
    Nice

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு