புதன், 19 டிசம்பர், 2018

2 அது பாரும் அந்தக் காலம்! (591)










3. அது பாரும் அந்தக் காலம்!

பசும் புற்தரையில் பசுமை மரச் சோலையில் பறவைகள் ஒலியில் நறவு ஒளி நிலவில் தங்க கதிர் வயலிலே தாரையாய் பொழிதலில் எங்களினச் சூழலில் தங்கத் தமிழ்ச் சோலையில்
தந்தை தொழிற்சிந்தை தாய் வீட்டுப்பணியில் நீந்த சேய்கள் சிறந்த ஆடை வயிற்றுக்குச் சுவையுணவு உய்த்து உருவாகி உணர்ந்தது நாம் உயர்ந்தது மெய் அது பாரும் பழமைக் காலம்
ஏரும் வயலுமாய் பேரும் சீரும் சார்ந்த நாள் கணனிரசனை வனப்பில் பணத்தில் மிதக்கும் கனவில் நினைத்தது நடக்குமிப்புலத்தில் நீந்தும் வெள்ளைகள் கூட்டினில் மேய்ந்து வாரிசுகள் சிக்கிடாது ஆய்ந்த மனவியலாளர் வரையோடு
அருகிலிருந்து பார்த்து அணைத்து வாரிசை வளர்த்து நினைத்துத் திகிலுடன் அனைத்துமிது புலம்பெயர் கோலம். எது நேருமென எப்போதும் நிதம் சோரும் மனம் பாரும் அந்தக் காலமோ இந்தக் காலமோ சொந்தமாய் கோருவதொரு இன்பக் காலம்! இனிய காலமே!
13-10-2002 (இலண்டன் ரைம் ரிஆர்ரி வானொலியில் வாசித்தது.)

1 கருத்து:

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...