திங்கள், 23 அக்டோபர், 2023

417 ( 950) மதிப்பற்ற நிலவுகள் பூமியில் - ஆங்காரம்...

   


            



மதிப்பற்ற நிலவுகள் பூமியில்


முத்த இதழ்கள் பிரிந்து சிதறின.

சத்தம் வேண்டாம் பக்கத்துப் பேயின்

பித்துக் காதலன் தாங்க மாட்டான்.

அத்தனைபொறாமை அப்பிய உருவம்

00

பரவசம் எமக்கு!  அரவம் தீண்டுமவனுக்கு!.

சரசம் தாங்காத ஆற்றாமை மனம்!

பரதம் ஆடும்  வார்த்தைகள்!  ஊத்தை

நரகம் அவனுக்கு வரமான உதாரணம்.

00

பூந்தளிர் பரத்திய வானத்தை ரசிக்க

முந்தாத நெஞ்சு    கீற்று நிலாவை

பாந்தமாய் மனம் சந்திக்காத நிலை

சீந்தாத நிலவே  பூமியில் இவர்கள்.!

00

-----------

ஆங்காரம்...


ஆங்காரம் திமிரின் ஆட்டத்தைக் குறைத்தால்

ஓங்காரம் மனதுள் பாங்காக நுழையும்.

தீங்கான எண்ணத்துத் தீயின் ஆட்டம்

நீங்கிடும் நிலையாய் நிச்சயம் நிச்சயம்!

00

பெரியவர் நடத்தை பெருமையாய் இருந்தால் 

உரிமைகள் தானே உறைவிடம் நாடும்

பரிதாபம் பண்பைக் கைவிட்டு நழுவும்

மரியாதை நன் மனதால் உருவாகும்.

00

வேதா. இலங்காதிலகம்- தென்மார்க் - 23-10-2023








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...