நன்நிலை ஒருமைப்பாடு.
குறளே உலகப் பொதுமறை
திறனை நினைத்தால் மகாசக்தி
திறமை வினையாகில் மனிதமாவாய்
புறமாகிடாது நாளும் காத்திடும்
00
புத்துலகு அமைக்க நாதன்
சத்துத் தந்தான் ஞானமாக
உத்தமமாய் மக்கள் மகிழ
எத்துணை சிறப்பு வழி!
00
முத்தாக அமைந்து உயர
ஓளவை தந்த நன்நீதி
கௌவி நீயும் வளர்ந்திடுவாய்!
கௌரவமாகும் உன் வாழ்வு
00
உனக்காக நிலவு காயவில்லை
எனக்காகவும் மலர் மலர்ந்து
தினகரனும் கதிர் வீசுகிறது
அனந்த வீரியமாக நடைபோடு!
00
உன் பாடு பொருள்களில்
உன் இரசனைக் குறிப்புகள்
இன்னிசை ஆலாபனை ஆகட்டும்
நன்நிலை ஒருமைப்பாடு வளரட்டும்
00
கனல்கவி -வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் -17-10-2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக