திங்கள், 11 மே, 2020

274. (837 ) முத்திரைகள்







முத்திரைகள் 

இவைகளைச் செய்து இசைந்த பலனடையவே
இவ்வுலகில் நேரமற்ற இடைஞ்சலான சுயநலம்.
இறைவா! மானுடர் இன்னல் அணைத்தால்
இகலோகம் போகும்  இடம் எங்கே!

இடறுதல் புகழென்றால் இவ்வுலகில்  இடர்ப்படுதலே!...
இடித்து அழிக்கும் இறுமாப்பு!..துண்டாடு!
இன்னாப்பு (துன்பம்) தராது இன்னிசை!  என்றும்
இன்புறவே வாழ்வில் இன்கவி சொல்லும்.

இன்னணம் வாழ  இனியது அணைக்க
இறுகும் தசைகள் இடம் தராது
இளக விடு!  இளிதலுக்கு ஆட்படாதே!
இளவேனில் தானே  இவ்வுலக வாழ்வு!

  11-5-2020






4 கருத்துகள்:

  1. Sujatha Anton :- இன்னணம் வாழ இனியது அணைக்க
    இறுகும் தசைகள் இடம் தராது
    இளக விடு! இளிதலுக்கு ஆட்படாதே!
    இளவேனில் தானே இவ்வுலக வாழ்வு!
    அருமை ஆரோக்ய கவிநயம். வாழ்க தமிழ்.!!!
    12-5-2020
    Like

    Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வு
    கருத்து தருவதற்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு

  2. Sivakumary Jeyasimman:- நல்ல பதிவு அக்கா

    Love
    14-5-2020
    Vetha Langathilakam :- பிரியமடன் மிக மகிழ்வு சகோதரி..
    .தொடர்ந்து பதிவுகள் பாருங்கள்.
    நல்வரவு

    பதிலளிநீக்கு
  3. Rasamalar Jeyam:- பயனுள்ள கருத்துகள் நன்றி
    14-5-2020
    Love


    Vetha Langathilakam :- பிரியமுடன் மிக மகிழ்வு சகோதரி..
    .தொடர்ந்து பதிவுகள் பாருங்கள்.
    நல்வரவு

    பதிலளிநீக்கு
  4. Gowry Sivapalan :- அவசியமாக எல்லோருக்கும் பகிர வேண்டிய பதிவு
    14-5-2020

    Like

    Vetha Langathilakam :- பிரியமுடன் மிக மகிழ்வு சகோதரி..
    .தொடர்ந்து பதிவுகள் பாருங்கள்.
    நல்வரவு

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு