தமிழன் மானம் அழிக்காதே!
(இக் கவிதை அலைகள் இணையத் தளத்தில் 18-12-2012ல் பிரசுரமானது.)
அழகிய கண்ணால் பார்த்திடு!
அழகுடன்அருளைக் காட்டிடு!
அழலாக அறிவொளி கூட்டிடு!
விழல் தொழில்களை விரட்டிடு!
நிலையற்று நாளும் அடுத்தவரது
நிலைப்பாட்டுயர்வைத் தாங்காது
அலைதல் அலைக்கழித்தல் என்ற
தலைகளற்ற நிலை மாற்று!
00
நிலைதடுமாறுவோர் சங்கமத்தில்
விலையற்ற விழலான ஒரு
வலையமைப்பு ஏன்! பெரு
கலை கலாச்சார அழிவேன்!
புத்திக்கு வேலை கொடு!
கத்தி புத்தியழிந்தவன் பாட்டு
உருகிடப் பேசு! வன்முறையற்று
உருக்குக் கருவியையும் வீசு!
00
தன் ஆக்கம் வேண்டாதோன்
பிறன் ஆக்கம் அழிப்பான்
ஒரு தடவை பிறப்பு
கருமையாயேன் பெருமழிப்பு!
மூதேவியை அணைப்பது வீண்!
சீதேவியை அணைப்பது தேன்!
தமிழனே அறிவால் வெல்லு!
தமிழன் பெயரைக் காத்திடு!
00
பொதியான அறிவைத் திற!
நிதியான தமிழன் கலாச்சார
மதிப்பை உயர்த்து! காலித்தன
கொதிப்பு நோய் பாதிப்பு!
சங்கைக் கேடாகத் தமிழ்
சங்கு ஊதாதே தமிழா!
எங்குமுன் பண்பாடு காத்து
பாங்குடன் ஓங்கிடு தமிழனென்று!
வேதா. இலங்காதிலகம். தென்மார்க் 21 - 1-2025
439 - பிரபலம் - கவிதை
மறைமலை அடிகள்
தனித்தமிழ் இயக்கம் தொடங்கி
தமிழைச் செழுமையாய் வளர்த்தார்.
தமிழறிஞர் ஆய்வாளர் வடமொழி
கலப்பற்ற தூயதமிழில் தமிழெழுதியவர்.
00
கடவுள் - சமயப் பற்றுருவாக்க
சைவப்பணி சொற்பொழிவு ஆக்கினார்.
இயற் பெயர் வேதாசலம்.
திருக்கழுக்குன்றத்தார் மறைமலையென்று பெயராக்கினார்.
00
நான்காம் வகுப்புவரை படித்தார்.
தந்தையிறக்க தமிழ் புலவர்
நாராயணசாமி பிள்ளையிடம் தமிழ்கற்றார்.
பேராசிரியர் ஆகப் பணியாற்றினார்.
00
ஐம்பத்திநான்கு நூல்கள் எழுதினார்.
பல்லாவரத்தில் இருந்த வீடு
மறைமலை அடிகள் நூலகமாக
தமிழக அரசு பராமரிக்கிறது.
00
சொக்கநாதபிள்ளை சின்னமடையார் தவப்புதல்வன்.
1876 ஆடி 15ல் பிறந்தார்.
தமிழ்கடல் - பல்லாவரம் முனிவர்
தனித்தமிழின் தந்தையெனவும் அழைக்கப்பட்டார்.
00
வேதா. இலங்காதிலகம். – தென்மார்க். –19- 1-2025
கறள் பிடித்த உணர்வு
கறள் பிடித்த உணர்வு
00
( துறத்தல் - கை விடுதல்- நீங்குதல்.)
00
மறதி மாபெரும் கெட்ட நோய்
கறள் பிடித்த உணர்வு தான்.
இறப்பின் நினைவு சிறப்பற்ற துயர்.
00
துறத்தலானது ஒரு தங்க மாலை
அறம் புறமாகத் தேடத் தேட
உறங்கலானது எண்ணம் அது எங்கே!
00
யாரும் மாலையைத் திருட வாய்ப்பில்லை
ஊகம் குப்பையோடு குப்பை ஆனதா!
யோகம் இல்லையா அது தொலைந்ததா!
00
தூக்கம் அற்ற சிந்தனை ஓட்டம்
ஊக்கமுடன் தியானமும் துணையாக ஒட்டியது
ஊரிலொரு புது மாலை வாங்கினேன்
00
பழையதை விற்றது ஒளியாகத் தோன்றியது
தழைத்தது மகிழ்வு தொலைக்கவில்லை மாலையை
பழைய நினைவு தரும்பியது புதுமை!
00
திருடன் மாலையைத் திருடவில்லை நினைவுத்
திருடன் ஒளிந்திருந்து வந்தது திகைப்பு!
தித்திக்கும் தெளிவு! நிம்மதி திரிசுடரானது!
00
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் 6-1-2025
நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...