செவ்வாய், 2 ஜூலை, 2024

432 (966) பணம் கொடு...எடு!

 



        



பணம் கொடு...எடு!


பணம் வரும் நாடு!
குணம் மாறுவது ஏன்!
மணம் மாறிய நிலையில்
பிணம் தானோ மனிதன்!
00
உணர்வு அறுந்த வாழ்வா!
உடையவன் போல் நடிப்பா!
ஊரிற்குத் தெரியும் உண்மையுரு
உதாரண வாழ்வு வாரிசுகளுக்கா!
00
உட்பகை உதிரத்தில் கலந்ததா!
உன்னத திறமை தலைப்பாரமா!
உன்மத்தம் தெளிந்து உருப்படு!
உன்முகம் தெளிவாகி உன்னதமாகும்!
00
பணம் உதவியது! பயனடைந்தாய்!
பங்கப்படவில்லை! பகிரங்கமாய் ஏற்றிடு!
பங்கிட்டதைத் தர வாரிசுகளும்
பொருந்தவில்லை! கொடுத்தவரிடம் எடுக்கட்டாம்!.


வேதா. இலங்காதிலகம் - தென்மார்க்- 1-7--2024





2 கருத்துகள்:

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...