ஞாயிறு, 30 மே, 2021

347 (910) அன்பின் நீரூற்று....

 




அன்பின்  நீரூற்று....


உதயமான கோவிட் உக்கிரத்தால்

இதயம் தீப்பிடிக்காத நிலையே

இதமான நோய்த் தடையூசியால்

இதயத்தில் ஓரளவு அமைதி 

பேணி அன்பினைப் பெய்தோம்

00

காணாத செல்வங்களைக் கண்டோம்

வீணாளாகாது அன்பினை விதைப்போம்

வாணாளில் கொரோனா வேண்டாம்

ஓய்ந்திடாது ஆசீர்வதிக்கப்பட்ட ஓதுவானாய்

வாய்த்த இன்பம் வளரட்டும்

00

இறக்கை பிடுங்கிய இசைப்புள்ளாக (குயில்)

திறக்க  முடியாத  கதவுகளாகவும்

துறந்தவர் போலப் பேரர்கள்

மறந்திடட்டும் இனி அதை

சிறப்புடன் புது இரத்தம் ஓடட்டும்.

00

சுட்டி மனம் சுகிக்கட்டும்

கட்டி அணைப்பதைக் கவனமாய்

கெட்டியாக மடித்து மனப்

பெட்டகத்தில் வைக்கப் போகிறேன்

ஒட்டியுறவாடக் கிட்ட வாங்கோ!


30-5-2021






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு