திங்கள், 21 ஜூன், 2021

351. (914) கவிதையே தெரியுமா!

 





கவிதையே தெரியுமா!

00

உயிர்மொழிகள் திரண்டு உருவாக்கும்

உணர்வு நிகழ்வு சமூகத் தாக்கம்.

பூவிதையாகப் பாவிதை தூவும் சமூகவயல்

கவிதையே தெரியுமா தொலைக்காட்சி அரங்கு.

பாகுபாடின்றி மனஎண்ணங்களை விதைப்போர்

பாணராகிப் பங்கெடுக்கும் கருத்துடைக் களம்.

பாவும் கருத்துத் தொலைபேசி   ஊடாக

பகிர்ந்திடும் வாரத்தின் ஒருநாள் உற்சவம்.

00

வளமிகு கலை கவிநய ஆளுமையாளர்

வரைப்புடுத்தும் நிகழ்வு, விதைப்பு சிறப்பு

வாஞ்சையுடன் சிஐ ரிவி வான் களத்தை

வாய்ப்புடன் ஆவலாய் வெள்ளியில் எதிர்பார்ப்பேன்.

வாரமொரு தலை;பு நீங்கள் இடுவதும்

வளமுடன் எமது தலைப்பில் கவிதையும்

வள்ளிசாய் இருவகையிலும் கவிதை வளைக்க

வாக்கு நயம் காட்ட நான் தயார்.

00

பூகோள மறுபகுதி மக்களும் கவிதைகளைப்

பூவிரிப்பாய்க் கேட்கவும் கவிதைகள் தரவும்

பூரண வாய்ப்பு கவிதையே தெரியுமா

தோகை விரிக்கும் இலக்கிய அழகு

தோரணம் கட்டிய பொலிவு தொலைக்காட்சிக்கு

வாகைசூடி வாய்மலரும் கவிதைகளின்

வாசம் அறிந்து புதிதாய்ப் பலரும்

வாசிக்கட்டும் கவிதைகள் திறமை வானெட்டட்டும்

00

29-6-2006

(வள்ளிசாய் - நேர்த்தியாய், சரியாய்)ச

சிஐ ரிவியில்----







2 கருத்துகள்:

  1. Sarala Vimalarajah
    ஆகா அழகாக சொன்னாங்க அக்கா
    22-6-2021
    Denmark Shan Subramaniam
    வாழ்த்துகள்
    22-6-2021
    Jasmin Kennedy
    சிறப்பு
    வாழ்த்துகள்
    23-6-2021

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு. வாழ்த்துகள். இத் தகவல் நான் அறியவில்லை

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு