வானிலை அறிக்கை போல... வாழ்க்கை அறிக்கை உண்டா?.
00
தந்திரம் கொண்ட மனநிலையால் விலகி
மந்திரமான மனிதநேயம் அணைப்பது நலமிகு
சுந்தரமான பிள்ளை வளர்ப்பில் உருவாகும்.
தன் காரியம் முடிக்க ஏமாற்றும்
பின்னோக்கும் சூறாவளி மனநிலை அறிய
சின்ன வானிலை (வாழ்க்கை) அறிக்கையும் வராது.
பின்னிப் பிணைந்து தீக்குச்சியாய்ப் பற்றும்.
அன்ன மனித மனம் புரியாதது.
ஒவ்வொரு விநாடியும் வௌ;வேறு முகங்களில்
அவ்வொரு மனிதரில் பூக்கும் வஞ்சம்
பூசல் மழையும் பூகம்பமும் மன
பூஞ்சணங்களும் பூங்கணையும் ஒன்றாகிறது பூவுலகில்.
00
மீன்கள் நீரில் உறங்குமா!
ஊன் தேடி அழுதிடுமா!
நோன்பில் மந்திரம் செபிக்குமா!
வானம் அதனைப் பார்க்குமா!
நானும் பார்த்திட ஆசை.
00
பூமிக்கு மட்டுமா பொறுமை!
வானுக்கும் சொத்து பொறுமை.
தனதென எதையும் பார்க்காது
தனதான பாதையில் பயணம்.
மனமார மகிழ்வுடை பயணம்.
00
வேதா. இலங்காதிலகம். தென்மார்க். 23-5-2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக