வெள்ளி, 24 ஏப்ரல், 2020

270. (833 ) உலகைப் புறந்தள்ளிச் சிகரம் ஏன்!....








உலகைப் புறந்தள்ளிச் சிகரம் ஏன்!....
0

தனியே கடதாசி வனத்தில்
இனிய எழுத்தழுத்தல் மட்டும்
கனியும் நயம் போல்
பனியாம் சுயநலக் குளிப்பு
0
தன்னிருப்பிடம் சூழல் அக்கறையின்றிப்
பின்னிடும் தவமோ மௌனம்!
புத்தகம் மட்டுமா முழுநேரமும்!
புதினம், வாழ்த்து புறக்கணிப்பேன்!
0
மயக்கும் வாழ்த்தும், கருத்தும்
சுயத்தைக் குளிர்வித்துக் குளிப்பாட்ட
தயவு காட்டுவதில்லை கருத்திட,
கயமையின்றிப் பிறருக்கு வாழ்த்திட
0
மன எண்ணங்களின் மாறுபாடு
சனங்களின் விசித்திரச் செயற்பாடு
கனமானது விளங்கிட முடியாதது
மனமுருகாதது,  கலங்கும் அறிவு
மயக்கமெனும் பூட்டு இறுகிட
வியக்கும் துரோகங்கள் துணையாகிறது
நயமான நிகழ்காலமொரு வித்தை
பயமின்றி மனிதம் தொலைகிறது.
0

 24-4-2020





4 கருத்துகள்:

  1. பேச்சியம்மாள் ப்ரியா:- பயமின்றி மனிதம் தொலைகிறது தான் ம்மா...
    மனிதம் தொலைத்த மனிதனைக் கண்டு
    இயற்கை சிரிக்கிறது இன்று...
    24-4-2020

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சகோதரி.. மிக மகிழ்ச்சி.
      நலம் பல நிறைக!

      நீக்கு
  2. Active Now
    Subajini Sriranjan நல்ல நல்ல குணங்கள் தொலைந்து போகிறது
    எந்தனைவிதமான மனிதர்கள் இவ்வுலகில்
    இந்த இயற்கையும் சீற்றம் கொண்டுவிட்டது...
    இனிய பா
    24-4-2020

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Vetha Langathilakam :- ஆம் நல்ல நட்பானவர்களுமே மாறி
      புகழ்- பணம் - பெருந்தொடர்பு என...
      எப்படி எப்படியோ மாறுகிறார்கள்.
      ஆண்டவா!!!..

      நீக்கு

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...