வியாழன், 3 பிப்ரவரி, 2022

375. (908) சிந்தைக் கலக்கம்

 





சிந்தைக் கலக்கம்

00


சித்தம் கலங்கி

மொத்தம் சாந்தியிழந்தால்

பத்தும் புரியாது

பரமபதமும் தெரியாது.

சில்லிட்ட மூளையால்

சில்லறைத்தனமே சிறப்பாகும்

சினமே சிவாயநமவென

சிதறுவாய் வையகத்தில்.

00

அழகுத் தோற்றமும்

அற்புதச் சிந்தனையும்

அவலட்சணமாய் உருமாறும்.

அச்சமும் தயக்கமும்

அடிமை கொள்ளும்

அறிவும் இலக்கியமும்

அகம் ஏற்காது 

அஞ்ஞாத வாசமாகும்

00

அடுத்தவர் அமைதியால்

அளவிலா மகிழ்வால்

அக்கினி எழுமுள்ளத்தில்

அகோர திட்டங்கள்

அளவின்றி வளரும்

அன்புமொழி   அழியும்

அணைக்கும் பொறாமை

அமைதி அழியும்.

00

வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் 2019.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு