வியாழன், 28 பிப்ரவரி, 2019

36 (622) எ - எழுத்து வரிகள்





                                                


எ - எழுத்து வரிகள்

எழுத்தாணி கொண்டு   எ - யின்  ஆரம்பத்தில்
எட்டு    வரிகள்  அமைப்பது   எளிமையே.
எழும்  கருத்துகள்  எழுத்தகராதி  இணைப்பே
எழிலாகக் கட்டுதல்  திறமைக்குச்  சவால்.

(எங்கள்   ஒற்றுமை  இணைவு  மாநிலத்தில்
எல்லையற்ற  சாதனையை  நிச்சயம்  எட்டட்டும்.
எண்ணங்கள் உயர்ந்தால்  செயலும்  சிறக்கும்.
எள்ளளவும்  பயமற்ற    துணிவின்  பயணமிது.

எது வரை போவோமென்பதில்லை வெல்லும்
எழுகளம். எள்ளுதலின்றி வாழ்தல் பிரதானம்.
எளிதல்ல ஏற்றம் காண முயன்றிடு.
எல்லவன் போன்று ஒளி பெறலாம்.

எஃகென   வலிமையாயச்   சேர்ந்து நடத்தல்  
எதிரிகளை   எட்டிச்   செல்ல  வைக்கும்.
எசகு  பிசகு  வழி  விலக்கி
எச்சரிக்கையாக   ஏறு  நடை   போடுவோம்.

எல்லவன் -  சூரியன்.
எழுகளம் - போர்களம்.
 9-5-2017.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...