சனி, 21 டிசம்பர், 2019

231. (799 ) அழகு







அழகு

அழகு   மனிதர்  எண்ணம்  பொருளிடவியல்பு.
பழகிட  மகிழ்வு    திருப்தி  காட்சியநுபவமீயும்.
அழகாடை,  முடி ,  முகவழகிலும்,   நல்லொழுக்கம்,
கல்வியழகு,  பேரழகு,  கவர்ச்சியீர்ப்பு  நல்கும்.

வணிகமயவழகென   இப்போது  உருவாகி  மனிதனையாட்டுகிறது.
வணிதமிகு   மனவமைதி,  நிதானம்,   ஆரோக்கியம்,
பிணியற்றவுடல்   மட்டுமல்ல  தன்னம்பிக்கையுள்ளமேயழகு  தரும்.
துணிவுடன்   நாமினியர்,  திறமையாளரெனுமெண்ணமே  பேரழகீயும்.

(வணிதம் - செப்பம்)

 11-5-2017




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...