சனி, 28 டிசம்பர், 2019

237, (805 ) ஆழிவித்தாம் (முத்து) கவிதை வீதியில் நான்








ஆழிவித்தாம் (முத்து) கவிதை வீதியில் நான்

ஆழிவித்தெனும் கவிதை வீதியில் செல்கிறேன்
கீழிருந்து உயர ஏறிக் கொடியேற்ற
வாழிய என்று வாழ்த்து ஓசை
யாழிசையாய் அசைய, சூழ்ச்சி புரிந்து
கீழிருந்து  வக்கிரம் வஞ்சகம் எழுவதா!

தானிஷ் ( 1987-டென்மார்க்) வந்து டெனிஷ் படித்து
தமிழ் இலங்கைப்  பெண்ணாக முதலில்
முன் பாடசாலை ஆசிரியராகியது (1993) பெருமை.
முதற் தமிழ் இலங்கைப் பெண்ணாக தமிழ் கவிதை 
நூலுருவாக்கியதும்  (2002) ஒரு சாதனை


மூன்று தசாப்தத்திலும் அதிகமாக டென்மார்க்கில்
மூத்த  பன்முகப் பெண் படைப்பாளி.
மூத்த இணையத்தளமெனது ' வேதாவின் வலை '
மூடியது இலவச அளவு நிறைய.
மூச்சாகத் திறந்தேன் இரண்டாவது இணையம்.

கோலோச்சிய  முதல்  "வேதாவின் வலை "
கோமளமாய் " வேதாவின் வலை.2 " உதித்தது.
கோவைக்கவி.வேட்பிரஸ்.கொம்  ஆங்கிலத்தில்.
கோவைக்கோதை.வேட்பிரஸ்.கொம் இரண்டாவதாக.
கோலூன்றியது  ஐந்து தமிழ் நூல்கள் பிரசவம்.

இரண்டாவது இணையத்தில் " என்னைப் பற்றி  "
திரண்ட தகவல்கள் அழுத்தினால் அறியலாம்.
இணையத்தின் பொருளடக்கம் பாமாலை கதம்பம்,
தரமுடன் காதல், பெண்மை, இயற்கை,
தமிழ்மொழி, அஞ்சலி வாழ்த்துப்பாக்களெனப் பல.

இன்று " கோவைக்கோதை.புளோஸ்பொட்.கொம்  "
மூன்றாம் வலையாக திறந்துள்ளேன் வாருங்கள்!
நன்று தமிழ் பின்னுவோரைக் கண்டு
என்றும் பெருமைப்படுங்கள்!  பொறாமை வேண்டாம்!
பொன்றும் தீமை நெஞ்சைத் தாக்கும்.

உங்கள் ஆதரவே என்னை உயர்த்தும்

கவி வித்தகர்  வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 19-12-2018

(என் ஏழாவது நூலுக்கு முன்னுரையில் இக்கவிதையை இணைத்தேன்.)






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு