திங்கள், 22 ஜூன், 2020

283. (846 ) சொற்கள், இறைவனின் பார்வை ....., நீதி சுரக்கும்...








சொற்கள் 

சொற்களை மதிப்பவர் தமிழின்
சொற்சுவை அறிந்த நேசர்.
சொற்பமென்பவர் சொல்வளம் அறியாதவரோ!
சொல்லணி, சொல்லதிகாரம் அறியாது
சொரி மணல் போன்று
சொரிவோரும் பலர் உளர்.  19-5-2020
0000  

இறைவனின் பார்வை வேண்டாமா!

அன்பீரம், அறிவீரம், கருணையீரம் 
மனித  மன ஈரத்தால்
என்றும் நெகிழ்வு மனமாகும்
நன்றென்று உபதேசம் ஊருக்கே! சிலருக்குத் 
தன்பாதை தலைகீழ்த் தவமாகும்!
0000

நீதி சுரக்கும்...

பீதி கொள்ளாது என்றும்
நீதி சுரக்கும் மனக்கேணி
மேதினியில் வேற்றுமை பாராது
மாதுன்னை அலட்சியம் செய்பவரோடு
மோதி வருந்தாது விலகியிரு!

மதியாரெனில் அவ்வளவே மதிநுட்பம்
மலடாகியது என்று நினைத்திடு!
மடமையே பகிரப்படும் அலட்சியம்
மலையருவியாய் நன்மை செய்ய
மகத்துவப் பிறவி வேண்டும்.
0000

 22-6-2020   




7 கருத்துகள்:

  1. Sarala Vimalarajah :- சொற்பதம் எல்லாம் சொரி மணல் போன்றது மிகவும் அழகு அக்கா
    22-6-2020
    Love

    Vetha Langathilakam :- பேரன்புடன் மிக மகிழ்வு சகோதரி தங்கள் கருத்திடலிற்கு.
    இறையாசி நிறையட்டும்.
    23-6-2020

    பதிலளிநீக்கு
  2. Manjula Kulendranathan :- நல்ல பதிவு ஒவ்வொரு முறையும் இது போன்ற புது புது அர்த்தங்கள் உண்டு வாழ்த்துக்கள் அக்கா
    23-6-2020
    Love

    Vetha Langathilakam :- மஞ்சு அன்புடன் மகிழ்ச்சி நீங்கள் கருத்திடுவதற்கு.
    சொற்களை மதிப்பவர் தமிழின்
    சொற்சுவை அறிந்த நேசர்.

    பதிலளிநீக்கு
  3. Nava Sellathurai
    நல்ல பதிவு புலவரே உங்கள் பணி தொடரட்டும்
    24-6-2020
    Vetha Langathilakam
    ஆம் சகோதரா.. தொடரும்.
    உங்கள் போல கருத்திடும் ஆதரவாளர்கள் துணையுடன் .
    மிக மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. Alvit Vasantharany Vincent
    வாழ்த்துகள் சகோதரி.
    24-6-2020
    Vetha Langathilakam
    உங்கள் போல கருத்திடும் ஆதரவாளர்கள் துணையுடன் .
    மிக மகிழ்ச்சி Alvit

    பதிலளிநீக்கு
  5. Active Now
    Rathy Mohan :- அழகான பதிவு

    Love
    24-6-2020
    Vetha Langathilakam:- உங்கள் போல கருத்திடும் ஆதரவாளர்கள் துணையுடன் .
    அன்புடன் மிக மகிழ்ச்சி ரதி...

    பதிலளிநீக்கு

  6. மிதயா கானவி :- நல்ல கருத்தும் அழகிய மொழிநடையும் வாழ்த்துக்கள் அக்கா
    24-6-2020
    Like


    Vetha Langathilakam :- நன்றி உறவே. அன்புடன் மகிழ்ச்சி. .
    பல் கருத்ததுள் கவிதைகளாகப் போடுகிறேன்
    வந்து கருத்து எழுதுவதில்லையே என்ற ஆதங்கம் உள்ளது.
    நடப்பவை நல்லவைகளாகட்டும்.

    பதிலளிநீக்கு
  7. Rasamalar Jeyam :- அழகான அருமையான நற்கவிதை வாழ்த்துக்கள் 👋

    Love
    24-6-2020
    Vetha Langathilakam :- Rasamalar Jeyam உங்கள் போல கருத்திடும் ஆதரவாளர்கள் துணையுடன் .
    அன்புடன் மிக மகிழ்ச்சி Malar...

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு