சனி, 13 மார்ச், 2021

337. (900) இன்னும் சிறிது நேரத்தில்....

 



இன்னும் சிறிது நேரத்தில்....


' தீதும் நன்றும் பிறர் தர வாரா '

ஓதினார் கணியன் பூங்குன்றனார் (புறநானூற்றில்)

தானே நினைந்து தானே குடித்து

வீணே விதிவழி மாளுதலிவன் தீர்ப்போ


விறைத்து உடல் பருத்து விகாரமாகி

விண்டலம் (தேவருலகு) ஏகுவானோ! அன்றி மனிதநேயமுடன்

விரும்பி அவசர உதவிக்கு அழைத்து 

உரிய சிகிச்சை பெறுவானென நம்புவோம்


போதை பாதை மாற்றும் நிலை

வியாபார நிலையம் பூட்டிய பின்பு

இரவுணவாக மது நிலையத்தின் அருகில்

ஆழ்ந்து கிடக்கிறான் உள்ளும் புறமும்


'நோதலும் தணிதலும் அவற்றோரன்ன

சாதலும் புதுவது அன்றே வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும்  இலமே' 

என்பதும்;  பூங:குன்றனார் தான்.


(நன்மை தீமை அடுத்தவரால்  வருவதில்லை.

துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் 

தருவதில்லை சாதல் புதுமையில்லை வாழ்தல்

இன்பமென்று மகிழ்ந்ததும் இல்லை)


அமலன் தந்த வாழவொரு கொடை

அமாவாசை ஆக்குதலும் நாமே மறக்கிறோம்.

தனது வாழ்வு காப்பற்றப்படுமா இன்னும்

சிறிது நேரத்தில் எந்நிலை! புரியாதவனிவன்.


31-8-2016






3 கருத்துகள்:

  1. Vetha Langathilakam
    LIKERS:- sakthi - umamaheswaran
    14-3-2021h
    Denmark Shan Subramaniam
    நன்று. வாழ்த்துகள்
    14-3-2021
    Vetha Langathilakam
    Denmark Shan Subramaniam
    May be an image of flower and text that says 'அன்புட மகிழ்ச்சி'
    14-3-2021
    Sarala Vimalarajah
    அருமை அக்கா
    14-3-2021
    Vetha Langathilakam
    Sarala Vimalarajah
    May be an image of flower and text that says 'அன்புடன் என் மகிழ்ச்சி!'

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு