வியாழன், 31 ஜூலை, 2025

494 (1036) கவியரங்கம் எனது 10வது

 

          நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6 - வலையேற்றியுள்ளேன். வேதாவின் வலை 2 ல் ஒரு நிகழ்வு ஏழாவது வலையேற்றியுள்ளேன். இனி கோவைக்கோதை.புளோஸ்பொட்டில் 10 வது வலையேற்றுகிறேன்.

28வது கவியரங்கம் எனது 10வது



நிலாமுற்றம் 28வது கவியரங்கம் 23-7-2016- அன்புடன் தமிழ் வணக்கம்.--------------------------------- தமிழ் மொழியது தமிழன் அடையாளம். தமிழை அணையுங்கள் மனதிற்குக் கும்மாளம். தமிழோடிணையுங்கள் வேர் காக்கும் தாராளம். தமிழாற் பேசுங்கள் விளைவுகள் ஏராளம். தன் மொழியால் இன்பம் விளையும் தாராளம். தமிழோடு தரமாக வாழுவோம்!..வாழுவோம்! நடுவர் வணக்கம்.--------------
பனுவல் திறமையே! பண்புடை பெண்மையே! மாண்பு மிகு பெண்மைத் தலைமையாம் திருமதி சியாமளா ரகுநாதன் அவர்களே வணக்கம். வாழ்த்துகள். சபை வணக்கம்.-----------
ஒன்று கூடி எம்மை ஆதரிக்கும் அன்புள்ள சபையோரே பன்முகத் திறமைகளே! சிறந்த படைப்பாளர்களே! அன்பு வணக்கம் அன்புடன் ஆதரவு தாருங்கள்.-------------------------------- மக்கள் சமுதாயம் மனிதநேயம் தன்மானத்தோடு குறிக்கோளுடன் நடந்தால் ஒழுக்கமுடைய முயற்சி வெற்றி தரும் என்று கூறி எனது தலைப்பு :--------------------------------------------------- ஒழுக்கம். __________________________________ மேன்மை தந்து மேலோர் ஆக்கும் தன்மையாம் ஒழுக்கம் ஆற்றல் பெருமையாம். நன்மை பெறும் மனிதக் கைத்தடியாம். வன்சொல் தவிர்த்தலும் ஒழுக்கத்தில் அடங்கும். இன்சொல் பேசுதலும் ஒழுக்கமாகும். சிடுசிடுத்து வெடுவெடுத்து வேண்டா வெறுப்பாக கடுகடுவென மனவிகாரம் சொற்களில் காட்டலும் கடும் நடவடிக்கைகளும் அடங்கும். ஒழுக்கவாளன் மானம் நிறைந்தவனாக இருப்பான். ஒழுக்கமற்றவன் செயல் பிறரைப் பாதிக்கும். இழுக்கு மக்கள் குமுகாயத்திற்கே ஏற்படும். ஒழுக்கத்திற்கு பக்தியும் பெருமளவில் உதவிடும். கனதியாம் பொறாமை சந்தேக ஒழிவு மன அழுக்கு அகற்றுமென்பது உறுதி. தொழும் கற்பு நெறியெனும் புனிதத்தை வழுவாது ஆணும் பெண்ணும் காத்திடணும். ஒழுக்கமுடைமை திருக்குறள் அதிகாரம் பதினான்கு முழுவதும் படித்தொழுகுங்கள். அறநெறி நீதிநூல்கள் வழி வழுவாதேகுங்கள். உயர் அறச்சீலராகலாம். பயங்கரவாதமற்ற உயரன்பு மக்கள் சமுதாயமாகலாம்.
நன்றி நவிலல்._____________________ இந்த நல் வாய்ப்பு – களம் தந்த நிலாமுற்றக் குழுமம் - அங்கத்தவர் இதைக் கேட்ட சபையோர் அரங்கத் தலைவர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 23-7-2016






செவ்வாய், 29 ஜூலை, 2025

493 (1035) கவியரங்கம் - 9

 

 493 (1035)   கவியரங்கம்  - 9

நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில்  நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6 - வலையேற்றியுள்ளேன். வேதாவின் வலை 2 ல் ஒரு நிகழ்வு ஏழாவது வலையேற்றியுள்ளேன். இனி கோவைக்கோதை.புளோஸ்பொட்டில்  9  வது வலையேற்றுகிறேன்.




தீது எனப்படுவது கண்டால்


நிலாமுற்றம் 32ம் கவியரங்கம்.  எனது - 9 20-8-16

தமிழ் வணக்கம்-------------------------

மக்களொரு கூட்டத்து வாழ்வு – அதை

நோக்கும் விதம் உணர்வு

பார்க்குமதன் சிந்தனை  கொண்டாடுதல்

மக்கள் பண்பாடாகிறது. – இவை

பழக்க வழக்கம்   உறவுமுறை

விழாக்கள்    கலைகளாக வெளியாகி

குழுவின் அடையாளம்   இருப்புமாகிறது.

எழுத்தில் பதிவாகி பகிரப்படுகிறது.

அது நம் தமிழ்மொழி. அத்தகைய தமிழிற்குச்

சிரம் தாழ்த்திய தமிழ் வணக்கம்.

தலைமை வணக்கம்---------------------------------

நிலாமுற்ற 32வது கவியரங்கத் தலைவரே

18 வருடங்கள் அனுபவமுடைய வைத்தியகலாநிதி

அறிவிப்பு மற்றும் இலக்கியத்துறையில் ஆர்வலர்

கவிதை எழுதுவதில் ஆர்வமான

டாக்டர் நாகூர் ஆரிப் அவர்களே

அன்பு வணக்கமும் இனிய

வாழ்த்துகளும்.     

சபை வணக்கம்:----------------------------

நிலாமுற்ற சபையோர்களே ஆதரவாளர்கள் அன்பான

கருத்தாளர்களே! கவியரங்கை ஆர்வமுடன்

பின் பற்றும் அன்பர்களே கவிஞர்கள்

கலைஞர்களே அன்பான வணக்கம்.

தீது எனப்படுவது கண்டால்

'' ரௌத்திரம் கொள் '' என்பதை

'' ரௌத்திரம் பழகு '' என்று

எடுத்துக் கொண்டு தொடர்கிறேன் -------------------------------

அநியாயங்களைக் கண்டு பேசாதிருக்காதே

நியாயமாகத் தட்டிப் பேசு

நேரடியாகக் கேள்விகள் கேள்.

அச்சப்பட்டுத் தீயவர்களிற்கு அடங்காதே!

மௌனமாகப் பேடியாக இருக்காதே

புத்தியுடன் எதிர்த்திடத் தயங்காதே.

விவேகமாய் அழுத்தமுடன் கேள்.

இன்றையது வன்முறை உலகம்.

பெண்ணிற்கு ரௌத்திரம் அவசியம்.

எதற்கும் ஆத்திரப் படுவது புத்தியீனம்.

ஆம் என்று தலையாட்டாதே

ஏன் எதற்கென்று அலசு.

மனப்பழக்கமாக்கி வைத்திடு கேள்வியை.

ரௌத்திரமடக்கி செயலில் காட்டுக.

''அஞ்சுவதஞ்சாமை பேதமை அஞ்சுவதஞ்சல்

அறிவார் தொழில்'' என்கிறார் வள்ளுவர் (குறள். 428)

நன்றி நவிலல்.:---------------------------------------

இந்த சந்தர்ப்பம் தந்த நிலாமுற்ற

நாயகன் சக நிருவாகிகளிற்கு

கேட்டிருந்த சபையோருக்கு

மனமார்ந்த நன்றியை மகிழ்வுடன் கூறி முடிக்கிறேன்.

வேதா. இலங்காதிலகம் டென்மார்க்  20-8-16

-------------------------------------------------------------





ஞாயிறு, 27 ஜூலை, 2025

492 (1034) 29வது கவியரங்கம் -எனது - 8

 

 நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில்  நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6 - வலையேற்றியுள்ளேன். வோகவின் வலை 2 ல் ஒரு நிகழ்வு ஏழாவது வலையேற்றியுள்ளேன். இனி கோவைக்கோதை.புளோஸ்பொட்டில் 8 வது வலையேற்றுகிறேன்.

29வது கவியரங்கம் -எனது - 8 


நிலாமுற்றம் கவியரங்கம் 29 --- 31-7-2016

தலைப்பு:-

பெண்கள் பெரும் மகிழ்வு கொள்வது.

தமிழ் வணக்கம்-----------------------------------------

தமிழில் பைபிள் போன்றது திருக்குறள்

முத்து மணிகள் ஏழாக வார்த்தைகளில்

கோர்த்த வைரக் குறள் வெண்பா.

வேத நூலாக வீடுகளில் வேண்டும்.

கீதை போல நாம் ஓதவேண்டும்.

நாடு மொழி இனத்திற்கப்பால்

வீடுபேறு சிறக்க உயர் அறங்கள்

கேடு இன்றிக் கூறும் தமிழ்மறை.

ஈடிணையற்ற வாயுறை வாழ்த்து திருக்குறள்.

என்று கூறிடும் என் தமிழ் வணக்கம்.

தலைமை வணக்கம்:--------------------------------------------------

தமிழில் பட்டம், சங்கத் தமிழ்நூல் ஆய்வு,

கல்வி ஒளியூட்டும் ஆசிரியச் சுடர்,

தமிழ் பணியாற்றும் கவிஞரே! தமிழ் மகளே!

இன்னும் திறமைகளுடன் வழி நடக்கும்

இன்றைய கவியரங்கத் தலைவர்

திருமதி இரா எழில் ஓவியாவே

அன்பு வணக்கம். கவியரங்கம் சிறக்க வாழ்த்துகளும்

சபை வணக்கம்---------------------------------------------------

நிலாமுற்றக் கதிர்களாம் கவிஞர்கள்,

கலைஞர்கள், எல்லோரையும்

ஊக்குவிக்கும் ஆதரவாளர்கள் விமரிசகர்கள்

என்ற பாத்திரமேற்றவர்கள்,

நடுவர்கள், சபையோர்களென

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

பெண்கள் பெரும் மகிழ்வு கொள்வது

கண்களென எண்ணுவது கணவர் பெற்றோர்.

கண்களிரண்டில் எது நல்லது என்றால்

திண்ணமான பதில் தருவது கடினம்.

மணம் புரிய முதல் பெற்றோரும்

மணம் பரிந்த பின்னர் கணவரென்றாலும்

இங்கு நல்ல கணவர் பெண்ணுக்கு

பொங்கும் மகிழ்வு தருமென்று கூறியெடுக்கும்

துணைத் தலைப்பாக:-

நல்ல கணவர்:----------------------------------------------------

நல்ல கணவர் அமையக் கொடுப்பனையுடைய

நல்ல மனைவி மனம் மகிழ்வாள்.

நல்லவர் இருவருமேயானால் குழந்தைகள் நல்லவராவர்

நல்லறம் நிறைய ஞானமும் பெருகும்.

கட்டுப்பாடு அடிமைத்தனமின்றி விட்டுப் பிடித்து

திட்டமிடலால் குடும்ப உயர்வு பெருகும்.

வட்டமிடும் சிறந்த குடும்ப ஆதிக்கம்.

தொட்டு விடும் நற்கணவர் பட்டம்.

வரு விருந்தோம்பி வாழ்தலில் அகப்

பெருமை சிறந்திடுமே! மனைவியை மதிக்காது

சருகாக மிதித்து அழுத்துதலில் கணவர்

சிறுமையடைகிறார் வாழ்வு மகா துன்பியலாகிறது.

மகிழ்ச்சி தேசம் தருபவர் இருவரிணைப்பில்

மனம் தொட்டு அன்பால் போர்த்தி

கனம் மறக்கச் செய்யும் மந்திரக்காரர்.

தினமொயிலான நினைவாலூக்கம் தருபவர் கணவரே

நன்றி நவிலல்---------------------------------------------------------------

உயிரெழுத்து உயிருள் பயிராகும் முதலெழுத்து.

உயிர் மெய்ப் பயிரெழுந்து உணரவைக்கும் அகிலத்தை.

மொழிகள் அழகுடை மலர்கள். மொழிகள் உருசியுடை கனிகள்.

விழி நிறைந்த இன்பத் துளி. அழிவற்ற பாதைக்கு ஒளியாம்

தமிழை இங்கு அரங்கேற்ற களமமைத்த குழவினருக்கு

நன்றிகள்.....நன்றிகள்

இதைக் கேட்ட சபையோருக்கு நன்றிகள்.

31-7-2016


  



  


புதன், 23 ஜூலை, 2025

491 (1033 நன்றியும் ஆசிகளும்...வாழ்த்துகளும்

 

          


           



23-7-2025

நன்றியும் ஆசிகளும்...வாழ்த்துகளும்

மகிழ்ச்சிப் பூக்கள் தன்னம்பிக்கை மரம்

நெகிழ்ச்சி மனம் சாரலாய்க் குளிர்ந்தது.

நெகிழ்ந்து செய்யும் நன்மைகள் ஒன்றாக

நெஞ்சை நிறைத்து நிலவாய் ஒளிர்ந்தது.

அன்பினாலே விருந்திட்ட இறறைவா வா!வா!

தென்பினை மேலும் தா! தா!

அன்பு வானில் நீயும் நாமும் சிறகசைக்க...

.........

எங்கள் ஐம்பத்தெட்டாவது  திருமணநாளுக்கு வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் நிறை ஆசிகளும்  இறையருளும் உரித்தாகட்டும்

ஐயனுக்கு – ஆண்டவனுக்கு நன்றி நன்றி.







திங்கள், 21 ஜூலை, 2025

490 (1032) மலர்த்தும் வேர்கள் (58 வது - இல்லற வாழ்வு) 2025

 




மலர்த்தும் வேர்கள் (58 வது - இல்லற வாழ்வு) 2025

00

ஆறு தழுவும் பாறையாய் பாறை தழுவும் 

ஆறாய் வாழ்வு அலையாட்டம் தான்!

காலம் யாவும்  நீ தானே!

காலன் வரும் வரையும் நீ தானே!

மொத்த ஆசிகளும் கொட்;டி  நிறையட்டும்!

00

உத்தம வாழ்வு சொர்க்கமாகட்டும்!

சத்தியப் பாதை தொடர்ந்து நீளட்டும்!

காற்றின் விரல் பிடித்து இறங்கும் இறகாக

தேற்றும் நம்பிக்கை விரலாகட்டும்!

வேற்றுரு அற்ற அன்பு கடலாகட்டும்

00

நிலாக்கவிஞர் - வேதா. இலங்காதிலகம். தென்மார்க் 21-7-2025










திங்கள், 14 ஜூலை, 2025

488 (1030) மன்னிப்பதே மனிதநேயம்.

 

           


     


    ஊ...ல...ழ...ள....குழுமம்

00

மன்னிப்பதே  மனிதநேயம்.


முன்னிற்கும்  செய்கை

மன்னிப்பதே மனிதநேயம்.

தெய்வப் பண்பாம்

மன்னிக்கும் குணம்.

00

இன்னிலை உன்னதமானது.

இன்னணம் வாழ்தல்

இன்னல் அற்றது.

உன்னதம் கொண்டது.


வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 25-2-





வியாழன், 10 ஜூலை, 2025

486 (1028) புதையல் தான் ஒவ்வோரு ஆக்கங்களும்

 

         






        புதையல் தான் ஒவ்வோரு ஆக்கங்களும்


புதையல் தான் ஒவ்வோரு ஆக்கங்களும்

அதை அடிக்கடி பார்ப்பது கருத்தறிய

கதை சொல்ல விரும்பாத கவிதைகள்

புதைக்கும் மௌனங்களும் ஏமாற்றங்களும் தொகை

விதையாகும் திறனுடை பூக்கும் வித்தகங்கள்.

00

தலைப்பில் குறையோ! மனதில் வறுமையோ!

கொலையானது அறிவோ! வறுமை பணமல்ல!

கலையான இலையாம் மனம் காயுமோ!

விலை இளக்குமோ சருகாகுமோ! வியப்போ!

மலையாகும் பா  யாக்கும் மன உறுதி.


கவி வித்தகர் வேதா. இலங்காதிலகம்  தென்மார்க்  10-7-2025


      



ஞாயிறு, 6 ஜூலை, 2025

485 (1027) வேல்ஸ் பயணம் இரண்டாவது அங்கம்

 

        

வேல்ஸ் பயணம்  இரண்டாவது அங்கம்

 


   


ஒரு கோடிக்கும் மேலாக ஆடுகள் உள்ளன. மக்களிலும் பார்க்க ஆடுகள் அங்கு அதிகமாக உள்ளனவாம். வேல்ஸ் நாட்டு ஆடு வளர்ப்பு  ஒரு நல்ல வருமானத்தை ஈட்டும் தொழிலாக இருக்கிறது. குறிப்பாக செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு இரண்டும் வேல்ஸ் நாட்டில் பிரபலமாக உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் கம்பளி மற்றும் இறைச்சி பால் விற்பனை மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். பாலும் சீஸ் ம் மிக விலை அதிகமாக உள்ளது. மகள் சொன்னா இடையிடையே ஆட்டுப் பால் வாங்கி பாவிப்பார்களாம்.

பாம்பு செட்டையைக் களற்றுவது போல  ஆடுகளின் கம்பளித் தோல்களும் களன்று விழுமாம். அப்படிக் களன்று தொங்குவதை நேரில் பார்த்தோம் வாகனத்தில் போகும் போது.



   

  


வேல்ஸ் நாட்டு ஆடு கம்பளித் தோல்கள் வளரும் நிலையில் உள்ளது என்றால் அது ஒரு வகையான செம்மறி ஆடு அல்லது ஆடு இனத்தைக் குறிக்கிறது. வேல்ஸ் நாட்டில் இந்த வகை ஆடுகள் கம்பளித் தோலுக்காக வளர்க்கப்படுகின்றன. கம்பளித் தோல் என்பது ஆடுகளின் உடலில் இருந்து கிடைக்கும் ஒரு வகை உரோமம் ஆகும். இது ஆடைகள் மற்றும் பிற பொருட்களுக்கு பயன் படுத்தப்படுகிறது.

(7.6 கி.மீட்டர்) Llanberis to Snowdon    போகும் புகைவண்டியில் திரும்பும் பயணம் ஸ்நோ டோன் உச்சிக்குப் பயணம்


     

ஸநோடோன் உச்சிக்குப் புகைவண்டியில் போகும் போது நீங்கள் காணும் நீர்வீழ்ச்சி இப்படி அழைக்கப்படுகிறது 



Ceunant Mawr Waterfall.  . சிலவேளை   Llanberis Falls. vன்றும் அழைக்கப் படுகிறது . The waterfall is located near Llanberis station, where the train crosses the Afon Hwch river.

 மகளின் இடத்திலிருந்து  இவரின் தங்கை வீட்டிற்கு புகையிரதம் எடுத்தோம். மூன்று மணி நேர ஓட்டம். இலண்டன் மிக மோசமாக மாறிவிட்டது. இட இருக்கை பதிவு செய்தோம்.  அதற்கு வாய்ப்பில்லை என்று எழுத்து ஓடுகிறது.

எதிலும் இருக்கலாம் என்று சொன்னார்கள். அப்படியே இருந்தோம். இயுஸ்ரனில் இறங்கினோம். ( Eusten)

பின்னர் ஊபரில் வீடு சென்றோம்.

மகள்  வீட்டில் மதியழகன் படம் பார்த்தோம். இவரின் தங்கை மகள் வீட்டில் தக் லைவ்ஃ  ம்   - ருறிஸ்ட் பஃமிலி யும் பார்த்தோம்.




494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...