சனி, 7 செப்டம்பர், 2019

175 (747 ) பூக்காரி







பூக்காரி

வறுமை பெண்களிற்குத் தன்னம்பிக்கை
திறமை தருகிறதென்பது உண்மை.
பொறுமையான சுய சம்பாத்தியம்.
பொறுப்பான குடும்பக் கவனிப்பு.

நிறம் மாறி வாடுவதாய்
நிலை மாறாத பூக்காரியிவள்.
தான் சூடி விரயமாக்காது
தாரளமாய் கூவிக்கூவி விற்பவள்.

மன்மதக் கணையாம் பூமாலை.
புன்னகைத் திரையில் வேதனை.
மாலைக்குள் விற்றுத் தீராவிடில்
பாலையாய் வயிறு காயும்.

மருக்கொழுந்தாள் முல்லைச் சிரிப்பழகி
தாமரை இதழ் செண்பகமே
மல்லிகையே சம்பங்கிப் பூவையே (பூக்காரியே)
தமிழ் பூவின் கதம்பமே!


4.6.2016









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...