சனி, 7 செப்டம்பர், 2019

177 (749 ) மோன நிலை.







மோன நிலை.

சித்தார்தரா அவரைப் பின்தொடரும்
பக்த பிக்குணியா பால
தேரோவா! பல கேள்விகள்
தேரோடின காட்சியால் என்னுள்.
எதுவும் கடக்குமெனும் சாந்தம்
பொதுப் போதனை வதனம்
மதுமிகு மோகனப் புன்னகை
அது இறவாப் புன்னகை.

அத்யந்த சயனம் கொண்ட
அரசமரத்தடிப் புத்தர் எப்போது
அமர்ந்த நிலையில் மறுபடி
அழகு சயனம் கொண்டார்!
தீராத நாட்டுப் பிரச்சனையால்
பாராத முகமாய் அவர்
இவர்கள் திருந்தார்கள் என்று
நிகர்வில்லா ஆழ்ந்த உறக்கமா!

மோனப் புத்தன் தூக்கம்,
தானம் வாங்கும் தேரோக்கள்
வானம் வெளிக்குமா! தமிழ்
கானம் இலங்கையெங்கும் கேட்க!
புத்தன் போதனை நாட்டில்
சத்தின்றிப் போனது ஏன்!
உத்தம புத்தம் ஏனோ
மொத்தமாய்ப் பின்பற்றப் படவில்லை!

16-10-2016






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...