ஞாயிறு, 6 நவம்பர், 2022

398. (931) கைக்கு எட்டாத வானம்

 



         



    கைக்கு எட்டாத வானம்


வானம் கைக்கு எட்டாததால்

வானவெளியை விட்டு வைத்துள்ளனராம்

நானும் நீயும் கனவுகளை

ஆனவரை வளர்த்து நிரப்புவோம்.

தேனமுத தமிழில் மூழ்குவோம்.

00

எதுகை மோனை சீரெனும்

பாதுகையோடு இலக்கியக் கவிதை

மோதுதல் மிக அழகு

கவிதை ஊர்வலம் ஒரு

மதுகைக் கனவு தேசம்.

00

வழிய வழியும்  உணர்வுகளின்

அழியாத ஊர்வலம் கவிதைகளாய்

செழித்த நதி ஓட்டமாய்

கொழித்துச் சிற்றாறுகளையும் இணைத்து

விழி நிறைந்து தன் வழியேகுகிறது.

00

வரும் மழை கண்டு

பெரும் பூமழை சொரிவதாகப் 

பாமழை மனதில் பொங்குகிறது

பகீரதியாய்ப் பார்த்தும் கேட்டும்

பாகுபாடின்றிச் சிந்தனை சொரிகிறது.

00

உன் காலடிப் பதிவிலே

என் கவியடி மனதிலே

நன் முதலடி தேடுதே

முன்னிலையாக மதிக்கும் வரி

மின்னலென ஒளிரட்டும் உலகிற்கு.

00

வேதா. .இலங்காதிலகம் -தென்மார்க்- 6-11-2022

( படம் - நாங்கள் ஒபேரா கட்டிடம் சிட்னியில் )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு